June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,140 பேருக்கு கொரோனா; 17 பேர் சாவு

1 min read

Corona for 1,140 people in Tamil Nadu today; 17 deaths

23.10.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,152 ல் இருந்து 1,140 ஆக சற்று குறைந்துள்ளது. 17 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,374 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் 1,25,158 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,94,089 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,01,76,761 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 632 பேர் ஆண்கள், 508 பேர் பெண்கள். தமிழ் நாட்டில் 1,374 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,44,805 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 17 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,004 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக இருந்த நிலையில் இன்று (அக்.23 ம் தேதி) 141 ஆக குறைந்துள்ளது.
கோவயைில் இன்று 132 பேருக்கம், செங்கல்பட்டில் 97 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் இன்று 10 பேருக்கும் தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 15 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.