June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பயிர்க்கடன் தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

1 min read

The Supreme Court dismissed the high Court’s order relating to crop loans

12/11/2021-

அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.

விவசாய கடன்

அனைத்து விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

அப்போது ஏற்கனவே தகுதி உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசை பொறுத்தவரை சிறு, குறு விவசாயிகளுக்கும், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் இடையே ஒரு வரையறையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. எனவே அனைத்து விவசாயிகளுக்குமான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை ஏற்க வேண்டியதில்லை எனவும் இந்த மனுவை முடித்து வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி

இதையடுத்து சிறு, குறு விவசாயிகளுக்கும், பெரிய விவசாயிகளுக்கும் இடையே ஒரு கோடு உள்ளது நல்லது என்று தெரிவித்த நீதிபதிகள் தமிழகத்தில் பயிர்க்கடன் பெற்ற 5 ஏக்கருக்கும் மேல் நிலம் விவசாய வைத்துள்ள விவசாயிகளின் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.