June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 789 பேருக்கு கொரோனா; 15 பேர் சாவு

1 min read

Corona for 789 people in Tamil Nadu today; 15 dead

16/11/2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 802ல் இருந்து 789 ஆக சற்று குறைந்துள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 913 பேர் குணமடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,03,202 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,16,421 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 481 பேர் ஆண்கள், 308 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 913 பேர் கொரோனால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,70,761 ஆக உயர்ந்துள்ளது.

15 பேர் சாவு

தமிழகத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் அரசு மருத்துவமனையில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,311 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக இருந்த நிலையில் இன்று (நவ.16 ம் தேதி)120 ஆக குறைந்துள்ளது.
கோவையில் 118 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும் செங்கல்பட்டில் 63 பேருக்கும், நெல்லையில் 7 பேருக்கும், தூத்துக்குடயில் 5 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டனர். தென்காசி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பதிவு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.