June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் பஞ்சாயத்தில் தடியடி/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram Pachayat- police lathi charch/ Story by Thabasukumar

17.11.2021
கண்ணாயிரம் பாட்டிகளுக்கு சேலை கொடுத்த ரகசியத்தை சொல்லும் போது தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்ட ரகசியத்தையும் சொல்லிவிட்டார். இதனால் மக்கள் ஆதரவு அவருக்கு பெருகியது. மோட்டார் சைக்கிள் வாலிபர் அடுத்த குற்றச்சாட்டை கூறமுடியாமல் திணறியபடிநின்றார்.
பெரிய கண்ணாயிரம் அவனை பார்த்து ஏய் வேற எதையும் பிரச்சினை பண்ணாதே. உனக்கு கூடுதலாக பணம் தர்றேன் என்றார். மோட்டார் சைக்கிள் வாலிபர் கோபமாக உங்களைவிடமாட்டேன். நான்தான் இந்தவார்டிலே போட்டியிடுவேன். கண்ணாயிரம் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்று கூறினான்.
கலியாணகார்டு படம் குறித்து கண்ணாயிரம் சொல்லியதைநான் ஏற்றுகொள்ளமாட்டேன். என்றான். அருவா அமாவாசை மெல்ல தம்பி உன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. ஏன்னா அந்த கலியாணகார்டை நான் முழுமையாக படிச்சு பார்த்தேன். அதில்மாப்பிளையின் அப்பா பெயருன்னு சின்னகண்ணாயிரம்தின் அப்பா பெயர் தான் போட்டிருக்கு அதனால உன் குற்றச்சாட்டை தள்ளுபடி பண்ணுகிறேன் என்றார்.
உடனே மோட்டார்சைக்கிள்வாலிபர் நான் வேற பஞ்சாயத்தில் பார்த்துகொள்கிறேன் என்று அருவாஅமாவாசையிடமிருந்து கலியாணகார்டை வாங்கிக்கொண்டு வேகமாக சென்றான்
. கண்ணாயிரம் பரிதாபமாக பார்த்தபடி நின்றார்.
தேர்தல் நேரத்தில் இந்த கல்யாண கார்டை காட்டி நம்ம புகழை டேமேஜ் பண்ணுவானோ என்ற பதட்டத்தில் தலையை சொரிந்தார். சரி, வேற பஞ்சாயத்துக்கு போறேன்னு சொல்லுறான். என்னடா வம்பு போச்சு. படம் மாறி போன விவகாரம் இருபது வருடம் கழிச்சு வந்து பழிவாங்குது. எல்லாம் நம்ம நேரம் என்று நொந்துகொண்டார்.
கண்ணாயிரம் யோசனையில் இருப்பதை பார்த்த அருவா அமாவாசை ஏய், என்ன யோசனை. உன் மேலே சொன்ன குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என்றாகிவிட்டது. பொது மக்களே கண்ணாயிரம் மேலே வேற குற்றச்சாட்டு எதுவும் இருக்கா என்று கேட்டார்.
முதியவர் உடனே இந்த கண்ணாயிரம் வெகுளித்தனமாக ஏதாவது பேசிப்புடுதாப்புல. அதை நிறுத்திப்புடணும். மற்றபடி ஒண்ணும் இல்லை என்று சொன்னார். சரி, அதை நிறுத்தச்சொல்லுடுறேன். என்ற அருவா அமாவாசை கண்ணாயிரத்தை பார்த்து ஏய் நிறுத்துவியாடா என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம் அவரை நிறுத்தச்சொல்லு. நானும் நிறுத்துறேன் என்றார். சரி, அவரும் நிறுத்திடுவாரு, நீயும் நிறுத்திடு என்று அருவா அமாவாசை கட்டளையிட்டார். சரி, பஞ்சாயத்து கலையலாமா என்று கேட்டார்.
அப்போது, ஈட்டி ஏகாம்பரம் சத்தமாக, என்ன தீர்ப்பே சொல்லல. அதுக்குள்ளே எப்படி பஞ்சாயத்து கலையும் என்றார்.
அருவா அமாவாசை கோபமாக, என்னய்யா கண்ணாயிரம் மேல எந்த குற்றமும் இல்லைன்னு சொல்லி யாச்சே, பிறகு என்ன என்று கேட்டார்.
ஈட்டி ஏகாம்பரம், இங்கே நான்தான் பஞ்சாயத்து தலைவரு. நான் வந்து ஈட்டியை குத்திட்டேனா. தீர்ப்பு செல்லாம ஈட்டியை மீண்டும் எடுக்கமாட்டேன் என்றார்.
அருவா அமாவாசை ஆத்திரத்தில் நீ என்னைய்யா தீர்ப்பு சொல்ல போற. சொல்லு பார்ப்போம் என்று சொன்னார்.
உடனே ஈட்டி ஏகாம்பரம், அப்படிவா வழிக்கு, என் கட்சிக்காரர் ஜவுளிக்கடையில் பாட்டிகளுக்கு கண்ணாயிரம் சேலை எடுத்து கொடுத்ததுக்கு பத்தாயிரம் ரூபாயும், என் கட்சிக்காரர் நல்ல வியாபார நேரத்தில் கடையை அடைத்துவிட்டு பஞ்சாயத்துக்கு வந்த இரண்டு மணி நேரத்துக்கு நஷ்ட ஈடாக இரண்டாயிரம் ரூபாயும் கண்ணாயிரம் தரணும் என்று சொன்னார்.
அதை கேட்ட அருவா அமாவாசை இது அநியாயம் என்றார்.
உடனே ஈட்டி ஏகாம்பரம், ம்.. அவசரப்படாதீங்க, இன்னும் இருக்கு. என்னிடம் அனுமதி பெறாமல் நீங்க இந்த ஊருக்கு வந்ததற்கு இரண்டாயிரம் அபராதம். வந்தபிறகு என் அனுமதி இல்லாமல் என் ஊரிலே பஞ்சாயத்தை கூட்டி என் கட்சிக்காரரை பஞ்சாயத்துக்கு இழுத்தற்கு இரண்டாயிரம் அபராதம். ஆக மொத்தம் நான்காயிரம் நீங்க தரணும் என்று தீர்ப்பு கூறினார்.
அதை கேட்ட அருவா அமாவாசை திடுக்கிட்டு ஏய் ஈட்டி ஏகாம்பரம் ஒருபைசா கூட தரமுடியாது. என்ன செய்வபார்ப்போம் என்று கண்களில் கோபம் கொப்பளிக்க சொன்னார்.
உடனே ஈட்டி ஏகாம்பரம் நிலத்தில் குத்தியிருந்த ஈட்டியை உருவி, ஏய் அருவா அமாவாசை நீ அபராதம் கட்டாம இந்த இடத்தைவிட்டு போகமுடியாது. பாப்பமா என்று சவால்விட்டார். அருவா அமாவாசை உடனே மேசையில் இருந்த அரிவாளை எடுத்து, டேய். எங்க வந்து பயம் காட்டுற.. என் அரிவாளுக்கு முதலில் பதில் சொல்லு என்று அதட்டினார்.
ஈட்டி ஏகாம்பரம் ஏய் என் ஊரிலே வந்து பயம்காட்டுறாயா என்று ஈட்டியை தூக்கி சுற்றினார். இதைபார்த்ததும் கண்ணாயிரம் அமைதி, அமைதி என்று சொல்லி பார்த்தார். யாரும் கேட்கவில்லை.

அருவா அமாவாசை யும் பதிலுக்கு அரிவாளை சுற்றினார். இரண்டு பேரும் மோதுவதுபோல் அங்கும் இங்கும் நடந்து ஆய்..ஊய் என்று கத்தினார் கள். ஆனால் மோதவில்லை.
அப்போது ஈட்டி ஏகாம்பரம் தின் மேல் வந்து ஒரு செருப்பு விழுந்தது. அவர் ஏய் எவண்டா என்மேல் செருப்பை வீசியது. தைரியம் இருந்தா. நேருக்கு நேராவாடா என்று கத்தினார். அப்போது மற்றொரு செருப்பு வந்து அவர் மீது விழுந்தது. அவர் ஆத்திரத்தில் அந்த செருப்பை எடுத்து பதிலுக்கு கூட்டத்தை நோக்கிவீசினார். அடுத்த வினாடி கூட்டத்திலிருந்து ஈட்டி ஏகாம்பரத்தை நோக்கி கற்கள் பறந்தன. அவர் நெற்றியில் கல்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் கோபத்தில் ஆ.. ஊ.. என்று கத்தினார்.
எல்லாம் கண்ணாயிரம் வேலையாத்தான் இருக்கும் என்று நினைத்து கண்ணாயிரத்தை நோக்கி கல்லை வீசினார். கண்ணாயிரம் விலகி கொண்டார். பதிலுக்கு அந்த கல்லை எடுத்து ஈட்டி ஏகாம்பரத்தை நோக்கி வேகமாக வீசினார். ஆனால் குறிதவறி அது அருவா அமாவாசையின் தலையில்பட்டு ரத்தம் சிந்தியது.
அவர்..எவண்டா என்மீது கல்வீசியது. நேருக்கு நேராவாடா என்று தொடைகளை தட்டினார். கண்ணாயிரம் பயந்து போய் கூட்டத்தில் கூட்டமாக பதுங்கிகொண்டார்.
கூட்டத்தில் பதட்டம் அதிகமாகியது. பழைய விரோதத்தை கணக்கில்வைத்து ஒருசிலர் மற்றவர்கள் மீது மறைவாக நின்று கல்வீசினார்கள். பெண்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
அந்த நேரத்தில் தகவல் அறிந்து அதிரடி போலீசார் வேனில்வந்து இறங்கினர். அவர்கள் மீதும் கற்கள் பறந்தது. அவர்கள்கூட்டத்தினர்மீது தடியடி நடத்தி கலைத்தனர். கண்ணாயிரம் மீதும் ஒரு அடி விழுந்தது.(தொடரும்)
வே.தபசுகுமார், புதுச்சேரி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.