June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நவம்பர் 29-ந் தேதி திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணி

1 min read

Farmers rally as planned on November 29th

21.11.2021

நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி திட்டமிட்டபடி நவம்பர் 29-ந் தேதி நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில், அந்த சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

இதற்கான மசோதா, வருகிற 29-ந் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவித்தார். இதனை பல்வேறு விவசாய அமைப்பினர் ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் வரும் 24-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா குறித்து விவாதித்து ஒப்புதல் அளிக்கப்படும் எனவும், இதை தொடர்ந்து பாராளுமன் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

திட்டமிட்டபடி..

இந்தநிலையில், டெல்லியில் கூடிய விவசாய சங்கங்கள், நவம்பர் 29-ந் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விவசாய சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவாதித்தோம். இதைத் தொடர்ந்து, சில முடிவுகள் எடுக்கப்பட்டன. 29ஆம் தேதி திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெறும்.

பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளோம் . நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அதில் குறிப்பிடப்படும். எம்.எஸ்.பி குழு, அதன் உரிமைகள், அதன் கால அளவு, அதன் கடமைகள் உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்படும்.

மின்சார மசோதா 2020, வழக்குகளை திரும்பப் பெறுதல். லக்மிபூர் கெரி விவகாரத்தில் மத்திய மந்திரி (அஜய் மிஸ்ரா ) பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடிதம் எழுதுவோம்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவித்ததை நாங்கள் அதை வரவேற்கிறோம். இது ஒரு நல்ல நடவடிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.