வேளாண் சட்டங்கள் வாபஸ்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min read
Agricultural laws repealed; Approved by the Union Cabinet
24.11.2021
வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண் சட்டங்கள்
மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இதற்கு விவசாயிகள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. அவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதராவாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் குரல் கொடுத்தன. தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவத்தார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் ஒப்புதல்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரைவு சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட உள்ள மத்திய அரசின் பட்டியலில் ‘வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா, 2021’ இடம்பெற்று உள்ளது.
இதன்மூலம், இம்மாதம் 29ம்தேதி தொடங்க உள்ள மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.