மணிப்பூரில் உலகின் மிக உயரமான பாலம் கட்டும் பணி மும்முரம்
1 min read
Construction of the world’s tallest bridge in Manipur is in full swing
28.11.2021
உலகிலேயே மிக உயரமான ரெயில்வே மேம்பாலம்
மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் 141 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.
உயரமான பாலம்
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், மேகாலயா, சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றில் ரயில் போக்குவரத்து போதுமான அளவில் இல்லை.
இந்த மாநிலங்களின் தலைநகரங்களை ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக மணிப்பூர் மாநில தலைநகர்-இம்பால் மற்றும் ஜிராபம் நகரங்களுக்கு இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக, நோனி பள்ளத்தாக்கின் குறுக்கே 141 மீட்டர் உயரத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதுவே உலகின் மிக உயரமான ரயில்வே மேம்பாலம் என்ற பெருமையையும் அடைய உள்ளது.
தற்போது, தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன்ஸ் என்ற நாட்டில் 139 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலம் தான், உலக அளவில் மிக உயரமானது என்ற பெருமையை பெற்றுஉள்ளது. மணிப்பூர் பாலம் உபயோகத்துக்கு வந்தவுடன் ஐரோப்பாவின் சாதனையை முறியடிக்கும்.
இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் சந்தீப் ஷர்மா கூறியதாவது:-
ஜிராபம் மற்றும் இம்பால் ஆகிய நகரங்களுக்கு இடையேயான 220 கி.மீ., துாரத்தை கடக்க இப்போது 10 மணி முதல் 12 மணி நேரம் வரை ஆகிறது.இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இரு நகரங்களுக்கு இடையேயான துாரம் 111 கி.மீ. ஆக குறையும். இரண்டு அல்லது இரண்டரை மணி நேரத்தில் இந்த துாரத்தை கடந்து விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.