தமிழகத்தில் இன்று 736 பேருக்கு கொரோனா; 9 பேர் சாவு
1 min readCorona for 736 people in Tamil Nadu today; 9 deaths
28.11.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 740 ல் இருந்து 736 ஆக சற்று குறைந்துள்ளது. 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 772 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,01,446 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27,25,467 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 444 பேர் ஆண்கள்,
292 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 772 பேர் கொரோனா இருந்து மீண்டு வீடு திரும்பி இரு்ககிறார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,80,667 ஆக உயர்ந்துள்ளது.
9 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,463 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 105 ஆக இருந்த நிலையில் இன்று 107 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 109 பேருக்கும், ஈரோட்டில் 72 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும், திருப்பூரில் 53 பேருக்கும், சேலத்தில் 50 பேருக்கும், நெல்லையில் 8 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.