June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 715 பேருக்கு கொரோனா; 12 பேர் சாவு

1 min read

Corona for 715 people in Tamil Nadu today; 12 dead

2.12.2021

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 718 ல் இருந்து 715 ஆக சற்று குறைந்துள்ளது. 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 748 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் 1,01,569 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 711 பேரும் , அசாம்- 1, மேற்கு வங்கம்-1, பீகார் -1, சத்தீஸ்கர் -1, வெளி மாநிலத்திலிருந்து வந்த 4 பேர் உள்பட 715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,28,350 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,44,72,727 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 420 பேர் ஆண்கள், 295 பேர் பெண்கள். இன்று 748 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,83,691 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,504 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக இருந்த நிலையில் இன்று 123 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 121 பேருக்கும் ஈரோட்டில் 65 பேருக்கும், செங்கல்பட்டில் 58 பேருக்கும், திருப்பூரில் 53 பேருக்கும், நெல்லையில் 5பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்காசியில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.