June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 மாணவிகள் பாலியல் பலாத்காரம்

1 min read

17 students raped while giving drugs mixed in food

7.12.2021

உத்தரபிரதேச மாநிலத்தில் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் முசாபாத்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை சம்பவத்தன்று இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர்.

அப்போது ஆசிரியைகள் யாரும் உடன் செல்லவில்லை. அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 2 பள்ளி மேலாளர்களும் அந்த உணவுகளை தூக்கி எறிந்து விட்டு புதிதாக போதை மருந்து கலந்த உணவுகளை மாணவிகளுக்கு சாப்பிட கொடுத்தனர்.

கொலை மிரட்டல்

பின்னர் 2 பேரும் அந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் பரீட்சையில் பெயிலாக்கி விடுவதாகவும், குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன அந்த மாணவிகள் இதுபற்றி பெற்றோர்களிடம் எதுவும் கூறவில்லை. மறுநாள் 17 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை.

அதன்பிறகுதான் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

விசாரணை

போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கொடூர செயலில் பள்ளி மேலாளர்கள் யோகேஷ்குமார், அர்ஜுன் சிங் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக அவர்கள் மீது போக்சே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.