மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரவுடிக்கு பெண்கள் தர்ம அடி
1 min read
Women beat Dharma to Rowdy for molesting students
7.12.2021
மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரவுடிக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
ரவுடி
ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் தோமன் சின்னா ராவ். போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள தோமன் சின்னாராவ் தன்னை நல்லவன் என்று காண்பித்து கொள்வதற்காக தொண்டு அமைப்பு ஒன்றை ஒன்றை துவக்கி சமூக சேவையில் ஈடுபடுவது போல் நடித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அங்கு உள்ள பள்ளிக்கு சென்ற தோமன் சின்னாராவ் தலைமை ஆசிரியரிடம் பேசி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், ரப்பர் ஆகியவற்றை கொடுத்தார்.
பின்னர் மீதி இருந்த பென்சில், ரப்பர் ஆகிவற்றை வீட்டுக்கு எடுத்து சென்ற தோமன் சின்னாராவ் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் வீட்டுக்கு வந்தால் பென்சில், பேனா, ரப்பர் கொடுக்கிறேன் என்று கூறி அவர்களை மாலை வேளையில் வீட்டுக்கு வரவழைத்தார்.
பாலியல் சில்மிஷம்
பென்சில், பேனா, ரப்பர் ஆகியவை கிடைக்கும் என்ற ஆசையில் அவருடைய வீட்டுக்கு வந்த மாணவிகளிடம் அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி மாணவிகள் வீட்டுக்கு சென்ற பின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
ஆவேசமடைந்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் தோமன் சின்னாராவ் வீட்டுக்கு சென்று அவரை தெருவுக்கு இழுத்து வந்து கடுமையாக தாக்கினர். இந்நிலையில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த மல்காபுரம் போலீசார் நிலைமையை சமாளிக்க முயன்றனர்.
கைது
தோமன் சின்னாராவ் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவரை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்தனர். எனவே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.