தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா; 8 பேர் சாவு
1 min read
Corona for 739 people in Tamil Nadu today; 8 people died
29.12.2021
தமிழகத்தில் இன்று 739 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 614பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 619 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 739 ஆக சற்று அதிகரித்துள்ளது. 8 பேர் இறந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,03,692 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 728 பேர், கத்தார் 2, ஐக்கிய அரபு எமிரேட் 5, மேற்குவங்காள மாநிலத்திலிருந்து வந்த 5 பேர் , பீகாரில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,46,000 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 424பேர் ஆண்கள், 315பேர் பெண்கள். இன்று 614 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,02,588 ஆக உயர்ந்துள்ளது.
8 பேர் பலி
தமிழகத்தில் இன்று 8 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,758 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 194ஆக இருந்த நிலையில் இன்று 294 ஆக சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் 78 பேருக்கும், செங்கல்பட்டில் 64 பேருக்கும், ஈரோட்டில் 34 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.