தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா; 6 பேர் சாவு
1 min read
Corona for 1,594 people in Tamil Nadu today; 6 deaths
2.1.2022
தமிழகத்தில் இன்று 1,594 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 624 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 1,489 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 1,594 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,02,237 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,575 பேர், ஐக்கிய அரபு எமிரேட் 6, சிங்கப்பூர் 2, அமெரிக்கா, கனடா, வங்கதேசம், மற்றும் நேபாளம் ஆகிய வெளிநாடுகள் சென்று திரும்பியவர்கள் தலா ஒருவரும் மற்றும் மேற்குவங்கம் 2, திரிபுரா 2, கர்நாடகா 2, பிகார் 1 ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என மொத்தம் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,51,128 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 954 பேர் ஆண்கள், 640 பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 624 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,05,034 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,790 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 682 ஆக இருந்த நிலையில் இன்று 776 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 776 பேருக்கும், செங்கல்பட்டில் 146 பேருக்கும், கோவையில் 80 பேருக்கும், திருப்பூரில் 68 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், நெல்லையில் 12 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 45 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.