சென்னை திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை
1 min read
Robbery at gunpoint at Chennai Thiruvanmiyur flying train station
3.1.2022
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரை கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி முனையில்…
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலையில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ரூ1.32 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். தலைநகர் சென்னையில் புறநகர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
இந்தநிலையில் எழும்பூர் ரெயில்வே டிஎஸ் பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரெயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.