June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 37,379 பேருக்கு கொரோனா; 124 பேர் சாவு

1 min read

Corona for 37,379 people in a single day in India; 124 deaths

4/1/2022
இந்தியாவில் ஒரே நாளில் 37,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 124 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27,553 பேருக்கும், நேற்று 33,750 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 37,379 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 11,007 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,43,06,414 ஆக உயர்ந்துள்ளது.

124 பேர் சாவு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,017 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,71,830 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான்

இந்தியாவில் இதுவரை 1,892 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 766 பேர் குணமடைந்த நிலையில் 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்;-

மராட்டியம் – 568, டெல்லி -382, கேரளா – 185, குஜராத் – 152, தமிழகம் -121, ராஜஸ்தான் -174 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.