இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 90,928 பேராக உயர்வு; 325 பேர் சாவு
1 min read
Daily corona exposure in India rises to 90,928; 325 deaths
6.1.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிரடியாக 90,928 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 325 பேர் இறந்துள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் அதிரடியாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்து 379 பேராக இருந்தது. அது புதன்கிழமை 58 ஆயிரத்து 97 என்ற அளவுக்கு உயர்ந்தது. இன்று காலை் 90,928 என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டது.
இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 51 லட்சத்து 9 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19 ஆயிரத்து 206 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 41 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
325 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு ஒரு நாளில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 876 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 148.67 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.