June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ரவுடியை நினைத்து பயந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram fear of Towel Rowdy / Story by Thabasukumar

15.1.2022

கண்ணாயிரமும் அவர்மனைவியும் கொரானா ஊசி போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தனர்.கொரானா ஊசி போட்டதுக்கு கண்ணாயிரம் மனைவி பூங்கொடிக்கு மெசேஜ் வந்தது.கண்ணாயிரத்துக்கு மெசேஜ் வரவில்லை.மெசேஜ் வருமா என்று காத்திருந்தபோது செல்போன் ஒலித்தது.அதில் மலையாளம் கலந்த தமிழில்பேசிய பெண் ஏடி.எம் நம்பரை கேட்டதால் பூங்கொடி அதிர்ச்சி அடைந்து கண்ணாயிரத்தைபார்த்து ஏங்க ஏடி எம் கார்டு நம்பரை கேட்குது நான் என்ன செய்யுறது என்று கத்த கண்ணாயிரம் சொல்லாதே சொல்லாதே என்றார்.பூங்கொடி உடனே போனை கட்பண்ணினார்.கண்ணாயிரம் ,பேங்கில் இருக்கும் பணத்தை ஆட்டைய போட என்ன டிரிக்ஸ் எல்லாம் பண்ணுறாங்க..என்றார்.பூங்கொடி ஏங்க உங்க போனுக்குதான இப்படி வருது..இனி போன் வந்தா நீங்களே பேசுங்க.எனக்கு ஏடி எம் கார்டு நம்பர் பேங் அக்கவுண்டு நம்பர் நினைவிருக்கும். மாற்றி மாற்றி பேசுனான்னா உளறிபுடுவேன்..உங்களுக்கு எந்த நம்பரும் நினைவிருக்காது எதை கேட்டாலும் சொல்ல மாட்டிங்க என்று போனை கண்ணாயிரத்திடம் போனை கொடுத்தார்.
கண்ணாயிரம் போனை வாங்கிட்டு இனி யார் பேசினாலும் நான்பாத்துக்கிறேன் என்றார்.போன்வருதா என்று இருவரும் காத்திருந்தனர்.ஐந்து நிமிடம் கழிந்ததுநாம் உஷாராகிட்டமுல்ல.இனி போன்வராது என்றார் கண்ணாயிரம். அந்த நேரத்தில் பூங்கொடியின் போன் ஒலித்தது. அம்மாடி, உங்க போனுக்கு பதிலாக என் போன் ஒலிக்குது..நான் அதை எடுக்கவா வேண்டாமா என்று கேட்டார் பூங்கொடி.உடனே கண்ணாயிரம் எடு,எடு என்றார்.பூங்கொடி தனது போனை எடுத்து ஹலோ என்றார்.எதிர் முனையில் மலையாளம் கலந்த தமிழில் ஏற்கனவே பேசிய அதே பெண் பேசினார்.

நீங்க அதிர்ஷ்டசாலியாக்கும்.. நீங்க லட்சத்திலே ஒருவராக்கும். உங்களுக்கு ஒரு கோடி ரூபா பரிசு விழுந்திருக்கில்லோ.. அதை நேரடியா கொண்டுவந்து கொடுக்க முடியாதுல்லோ..உங்க பேங் அக்கவுண்டு நம்பரை சொல்லுது. யான் பணத்தை அதில் போடுது..தாமதிச்சுது. பரிசு வேற ஆளுக்கு போகுமல்லா..என்றது.
ஒரு கோடி ரூபாய் என்றதும் பூங்கொடிக்கு ஆசை மயக்கியது. விட்டா கிடைக்காதே என்று மனம் தடுமாறியது. ஆனாலும் உஷாராகி..அக்கவுண்டு நம்பர் என் வீட்டுக்காரருக்குதான் தெரியும்..இன்னா அவருக்கிட்ட கொடுக்கிறேன்.. என்றவாறு கண்ணாயிரத்திடம் கொடுத்தார். கண்ணாயிரம் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு..ஹலோ..என்றார்.
எதிர்முனையில் பெண் குரல் ஒலித்தது. பூங்கொடி பொண்ணு பேசுது..பேசவா..என்று கண்ணாயிரம் கேட்க பூங்கொடி பேசுங்க, பேசுங்க என்றார்.
கண்ணாயிரம்..மீண்டும் ஹலோ என்றார். எதிர் முனையில் பேசியவர்..என்ன .அக்கவுண்டு நம்பர் சொல்லு..ஒரு கோடியாக்கும்..நம்பரை சொல்லு..என்றது. கண்ணாயிரம் உடனே. ஒரு கோடியா..ம் ஒண்ணு சைபர்,சைபர்,சைபர்,சைபர்,சைபர் என்று அடுக்கி கொண்டே போனார்.
எதிர்முனையில் பேசியவர் ,என்ன அக்கவண்டு நம்பர் கேட்குது நீங்கள் ஒரு கோடிக்கு எத்தனை சைபருன்னு பரையுது. பேங் பாஸ்புக்கை எடுத்து அக்கவுண்டு நம்பரை பரை என்றது.
கண்ணாயிரம்.உஷாராக..எங்களுக்கு பேங் அக்கவுண்டே கிடையாது. இதில் நம்பருக்கு எங்கே போவது.. என்றார்.
எதிர்முனையில் பேசிய பெண்குரல் திடீரென்று ஆண் குரலாக மாறியது. கண்ணாயிரத்தை ஏய் கஸ்மாலம், கயிதை மொள்ளமாரி, அறிவு இருக்கா. நான்சென்ஸ். நேருல வந்தன் தொலைச்சிடுவேன். என்னையே டபாய்க்கிறீயா. வூட்டு அட்ரசை கொடு தூக்கிறுவேன்..என்ன நினைச்சுக்கிற..என்று மிரட்டியது.
கண்ணாயிரம் பயந்து போய், பூங்கொடி பேசுறது பொண்ணு இல்ல,ஆணு. அவன்தான் பொண்ணுமாறி குரலை மாத்தி பேசுறான். அவன்தான் பிராடு என்ன பிராடுங்கிறான்..சோமாரி..என்று திட்டினார்.
பூங்கொடி..ஏங்க..போனை கட் பண்ணுங்க.. அவருக்கு கேட்க போகுது.. என்றார். கண்ணாயிரம் உடனே போனை கட்பண்ணினார்.
அப்பாட பணம் பறிக்க..எப்படியெல்லாம் முயற்சி பண்ணுறாங்க .தப்பிச்சோம்..நமக்கு பேங்கிலே..ஆயிரத்து ஐநூறு இருக்கும். இதுக்கே இந்தபாடா என்று கண்ணாயிரம் பெருமூச்சுவிட்டார்.
ஏங்க.ஒருகோடின்னான் அது போனா போகுது..நீங்க காணாம போன வடநாட்டு கழுதையை கண்டுபிடிக்கிற வேலையை பாருங்க..ஏதாவது அமொண்டு கிடைக்கும்.. என்றார். பூங்கொடி.உடனே கண்ணாயிரம் பாப்போம்..அதைபத்தி யோசிக்கணும்..கொஞ்சம் இந்தி தெரிஞ்சா நல்லது. நம்மளை எவனும் ஏமாற்றமாட்டான்ல.. நான் கடையிலே போய் இந்தி கற்று கொள்வது எப்படி என்கிற புத்தகத்தை வாங்கிட்டுவர்ரேன் என்றார் கண்ணாயிரம்.
சரி,சீக்கிரம் வாங்க .சமைச்சுவைக்கிறேன் என்றார் பூங்கொடி. கண்ணாயிரம் கடைக்கு புறப்பட்டார். துண்டு போட்டுட்டு போவதா வேண்டாமா என்ற யோசனை வந்தது. ஏற்கனவே பூங்காவுக்கு போயி துண்டு போச்சு.. இனி துண்டே வேணாம் என்று முடிவுசெய்தார்.
பூங்கொடியிடம் ரூபாய் வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேவந்தார். கடைவீதிக்கு நடந்த கண்ணாயிரத்தை பார்த்து ஒருவன் ஓடி வந்தான்.
கண்ணாயிரம் அண்ண..உங்க கிட்ட ஒரு சிறுமி..துண்டை புடுங்கிட்டாமே..ஏன் துண்டை கொடுத்திங்க என்று கேட்டான். கண்ணாயிரம் உடனே..ஏய். நான் எங்கேடா..துண்டை கொடுத்தேன்.அதுதான்..அப்பா,அப்பா என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்து துண்டை பறிச்சிட்டு ஓடிச்சு. நான் என்ன பண்ணமுடியும்..என்றார்.
அங்கேதான் தப்பு பண்ணிட்டிய அண்ணே..துண்டைநீங்க விட்டிருக்க கூடாது.. இனி உங்களுக்கு சிக்கல்தான் என்றார் அவர்.அதை கேட்ட கண்ணாயிரம்..என்னடா பயம்காட்டுற..என்ன சிக்கல் என்று கேட்டார்.அதற்கு அவர்..உங்களுக்கு அந்த விசியம் தெரியாதா..அந்த சிறுமியோட அப்பா யார் தெரியுமா..பெரிய ரவுடி..பக்கத்து ஊரு..பேரு. கபாலி. எப்பவும். மாலை மாதிரிதான் துண்டை போடுவான் .அதேமாதிரி அந்த ஊர் வாலிபர் ஒருவர் மாலைமாதிரி துண்டை போட்டுட்டு போயிருக்காரு..அந்தவழியா ரவடி தன் மகளுடன் வந்திருக்கான். ரவுடி மகள் சிறுமி என்பதால் விவரம் பத்தாது. அது மாலைமாதிரி துண்டு போட்டிருக்கிறவங்க எல்லாரும் அப்பாதான்னு நினைச்சுக்கிட்டு அந்தவாலிபரை பார்த்து அப்பான்னு கத்திச்சி. அவ்வளவுதான்..அந்த ரவுடி கோபத்தில்…அந்த வாலிபர் மேல் சந்தேகப்பட்டு..டேய்..யார்ரா நீ..எப்படிடா நீ என்னைபோல துண்டு போட்டுட்டுவரலாம்..என்று கேட்டு தகராறு செய்தான்.அதற்கு அந்த வாலிபர்..நான் அப்படிதான்வருவேன்னு சொல்ல ஆத்திரம் அடைந்த ரவுடி மறைச்சு வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்தவாலிபர் கையை வெட்டிப்புட்டான்.அந்த வாலிபர் இன்னும் ஆஸ்பத்திரியிலே இருந்து வரல..இப்பம் நீங்கவந்து மாட்டிக்கிட்டிங்களே..என்று பயம் காட்டினான்.
கண்ணாயிரத்துக்கு கதிகலங்கியது. நம்மள..எந்த கையை வெட்டுவான்னு தெரியலையே…சரிப்பா..அந்த ரவுடி இப்பம் எங்கே இருக்கான்..என்று கேட்டார்.
அதற்கு அவர்.அவனா..ஜெயிலில் இருக்கான்…எப்போ வெளியேவருவான்னு தெரியாது..கைபத்திரம்..என்றான்.
உடனே கண்ணாயிரம்…அந்த ரவுடிக்குதான் என்னை தெரியாதே…என்றார். அதற்கு அவர்..அந்த சிறுமிக்குதான் உங்களை நல்லா தெரியுமே.. அடையாளம் காட்டிடும். துண்டு வேற சாட்சி இருக்கு….தனியா எங்கேயும் போகாதீங்க..என்றான். அதற்கு கண்ணாயிரம்..ஏய்..ரொம்ப பயம் காட்டாதேடா..அந்த ரவுடி யாரும். கழுத்ல மாலைமாதிரி துண்டு போடக்கூடாதுன்னு உத்தரவு போட்டது எனக்கு தெரியாதுடா..அப்படியே..அந்த ரவுடி வந்தா..ரவடி சார் ரவுடி சார். நீங்க போட்ட உத்தரவு எனக்கு தெரியாது.. இப்போ..நான் துண்டே போடுறதுல்லன்னு சொல்வேன்ல..அதை அவர் கேட்டுட்டு என்னைவிட்டுருவான்ல..என்றார்.
அதற்கு அவர்…அந்த சின்னபுள்ள உங்கள அப்பான்னு கூப்பிட்டதை மட்டும் அவன் மன்னிக்கமாட்டான்..என்று மேலும் பயம் காட்டினான்.
கண்ணாயிரம் பயத்தில் கால் நடுங்கியது.
-வே.தபசுக்குமார் .புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.