May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா அதிகரிப்பால் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை அதிகரிப்பு

1 min read

Increased sales of paracetamol tablets due to corona increase

18.1.2022

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.

டோலோ-650 மாத்திரை

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டோலோ – 650 மாத்திரை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை சுமாராக ரூ.560 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம், மருந்து விற்பனையில் முன்னிலை வகித்து வந்த ஜிஎஸ்கே பார்மா – மருந்து நிறுவனத் தயாரிப்பான கால்பால், சுமோ எல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் விற்பனை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாராசிட்டமால்

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் பாராசிட்டமால் மாத்திரிகளின் விற்பனை ஏறுமுகம் கண்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.28.9 கோடிக்கு டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும்.

நாட்டில் கொரோனா அலை தீவிரமாக இருந்த 2021, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் நாட்டில் மாத்திரை விற்பனையும் உச்சம் தொட்டுள்ளது. அதே மாதத்தில் கால்பால் விற்பனை 28 கோடி ரூபாயாக இருந்தது.

ஏராளமான பாராசிட்டமால் மாத்திரைகள் இருக்கும்போது டோலோ-650 மாத்திரையின் விற்பனை உச்சம் தொடக் காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்ததில், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு அது ஒரு மருந்தே தீர்வாக இருக்கும் என்பதும், பெரியவர்களுக்கு டோலோ-650-ஐ மருத்துவர்கள் பரிந்துரைப்பது அதிகம் என்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இதய நோய், சிறுநீரக தொற்று, நீரிழிவு போன்றவை இருக்கும் நோயாளிகள் கூட, டோலோ-650 மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். அது பாதுகாப்பானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.