May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் தைப்பூச திருவிழா; முருகன்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

1 min read

Thaipusam Festival at Thoranamalai; Murugan-Valli, Deivanai Thirukkalyanam

18/1/2022
தென்காசி அருகே கடையத்தில் அகத்தியர், தேரையர் வாசம் செய்த தோரணமலை முருகன் கோவிலில் வருகிற 18ந் தேதி தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மிகுந்த கட்டுப்பாட்டுகளுடன் விழா நடந்தது.

தோரணமலை

தோரணமலை தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு மலை உச்சியில் கிழக்கு நோக்கிய குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

தோரணமலையில் தமிழ்மாதம் கடைசி வெள்ளி அன்று சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மலை உச்சியில் இருந்து சுனை நீரை பக்தர்கள் எடுத்துவந்து அபிஷேகம் நடைபெறும். பின்னர் விவசாயிகள் வாழ்வு முன்னேற சிறப்பு பூஜை நடைபெறும். கிருத்திகை அன்றும் மலைமேல் உள்ள முருகனுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பவுர்ணமி அன்று காலையில் கிரிவலம் நடைபெறும்.

தைப்பூசம்

இங்கு தைப்பூசம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். பெண்கள் சீர்வரிசை கொண்டு வர கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டு தைப்பூச திருவிழா 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடந்தது. இதுகொரோனா காலம் என்பதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது, அதன்மின் பெண்கள் சீர்வரிசை தட்டு ஏந்தி வர முருன்-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதனை திருசெந்தூரைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணன், எம்.கே.வீரபாகு நடத்தி வைத்தனர்.

வழக்கமாக தலைவாழை இலைபோட்டு, அறுசுவை உணவு வழங்கப்படும். ஆனால் கோவிலில் அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ. செண்பகராமன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

செண்பகராமன் தொடர்பு எண் 99657 62002.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.