July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாரதி-செல்லம்மாளுக்கு முழுவுருவச் சிலை; சபாநாயகர் அப்பாவு அடிக்கல்நாட்டினார்

1 min read

Complete statue of Bharathi – Sellammal in the shop; Speaker Dad laid the foundation

19.1.2022
கடையத்தில் பாரதியார்-செல்லம்மாளுக்கு முழுவுருவச் சிலையை சேவாலயா சார்பில் அமைக்கப்படுகிறது. இதற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.

கடையத்தில் பாரதி

மகாகவி பாரதியார் கடையத்தில் பிறந்த செல்லம்மாளை திருமணம் செய்தார். பாரதிய உயிரோடு இருந்தபோது அவரை யாரும் மதிக்கவில்லை. இறந்த பிறகும் கடைத்தில் அவரை பெயரளவுக்குத்தான் புகழ்ந்தார். அவருக்கு என்று எந்த விழாவும் எடுத்ததில்லை. மறைந்த பேராசிரியர் எல்.எம்.நாராயணன் அவர்கள்தான் பாரதி மன்றம் தொடங்கி அவருக்கு பல விழாக்களை எடுத்தார். அவர் மறைந்த பிறகு மீண்டும் பாரதியை மறக்கும் நிலைக்கு கடையம் வந்தது.
இந்த நிலையில்தான் சென்னையில் சேவாலயம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் முரளிதரன் அவர்கள் கடைத்தில் பாரதி புகழ்பாட தொடங்கினார். அவர் கடையத்தில் செல்லம்மாளுடன் பாரதியாருக்கு சிலை வைக்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். அவர் செல்லம்மாள் வாழ்ந்த அக்ரஹாரத்தில் (பழைய கிராமம்) சிலை வைக்க விரும்பினார். ஆனால் அதற்கு சட்டம் அனுமதி கொடுக்கவில்லை. அதோடு சில பழமைவாதிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நூல் நிலைய வளாத்தில் அமைக்க அனுமதி கிடைத்தது. இந்த நூலகம் வரவும் எல்.எம்.நாராயணன்தான் முழுகாரணம். தற்போது அந்த நூலகம் பழுதடைந்துவிட்டதால் அதை இடித்துவிட்டு கட்ட அரசு முடிவு செய்தது.
இந்த நேரத்தில் அதையும் அதோடு பாரதி மையத்தையும் சேர்த்து சேவாலயம் சார்பில் கட்டித்தருகிறோம் என்ற முரளிதரன் அவர்கள் கூறினார்கள். இதற்கு அரசும் அனுமதி அளித்தது.

அடிக்கல் நாட்டினார்

இதனை அடுத்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா 19&ந் தேதி புதன்கிழமை நூலக இடத்தில் நடந்தது. சாபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேவாலயா முரளிதரன் நன்றி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.