தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா; 35 பேர் சாவு
1 min readCorona for 26,981 people in Tamil Nadu today; 35 deaths
19.1.2022
தமிழகத்தில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 26,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டு உள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். 17,456 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 23,865 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 26,981 ஆக சற்று அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,50,635 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 26,949 பேர், மற்றும் வங்கதேசம் -7, குவைத்-3 பேர், ஐக்கிய அரபு எமிரேட், சென்று திரும்பியவர் ஒருவர் ,மேற்குவங்கம் 5, கேரளா 4கர்நாடகா 3, மணிப்பூர் 2 ஜார்கண்ட் 2, ஆந்திர மாநிலம் 2 , மிசோராம் 2, அசாம் , சண்டிகர் மாநிலங்களுக்கு சென்று திரும்பிய தலா ஒருவர் என மொத்தம் 26,981பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,14,235 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 5,99,80,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 15,477 பேர் ஆண்கள், 11,504 பேர் பெண்கள். தமிழகத்தில் 17,456 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,06,501 ஆக உயர்ந்துள்ளது.
35 பேர் சாவு
தமிழகத்தில் 35 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,073 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை8,305 ஆக இருந்த நிலையில் இன்று 8,007ஆக சற்று குறைந்துள்ளது.
செங்கல்பட்டில் 2194 பேருக்கும், கோவையில் 3082 பேருக்கும், கன்னியாகுமரியில் 1008 பேருக்கும், நெல்லையில் 713 பேருக்கும், தென்காசியில் 204 பேருக்கும், தூத்துக்குடியில் 299 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உ்ளது.