June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

புத்தகத்தை சொல்லி கொடுக்க சொன்ன கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை

1 min read

Kanaayiram with Hidi book ./ Story by Thabasukumar

19.1.2022

கண்ணாயிரம் காணாமல் போன வடநாட்டு கழுதையை கண்டுபிடிக்க இந்தி தெரிந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்தார். அதனால் இந்தி கற்றுக்கொள்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்க கடைவீதிக்கு சென்றார்.அந்த நேரத்தில் அங்கு வந்த ஒருவர் கண்ணாயிரத்தை பார்த்து என்ன கண்ணாயிரம் பூங்காவுக்கு சென்ற உங்களை பார்த்து ரவுடியின் மகள் அப்பா என்று கூப்பிட்டு கழுத்தில் மாலைபோல்போட்டிருந்த துண்டை பறித்துட்டு ஓடிட்டா இனி உங்களுக்கு சிக்கல்தான் என்று சொன்னார். மேலும் கழுத்தில் மாலைபோல் துண்டு போட்ட வாலிபரின் கையை ரவுடி வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருக்கான் விரைவில் வெளியே வந்தால் உங்க கையையும் வெட்டுவான் என்று எச்சரித்தார். அதைகேட்ட கண்ணாயிரம்..ம்..கையை வெட்டுனா உடனே ஜெயிலில் இருந்து ரவுடியை விடமாட்டாங்களே என்றார்.
அதற்கு அவர்..என்ன சொல்லுற கண்ணாயிரம்..அந்த ரவுடி. பினாயிலில வந்துருவாருன்னு சொல்லுறாங்க..என்று சொன்னார். பினாயிலா ..அது என்ன பினாயிலு..புரியலையே என்றார் கண்ணாயிரம். அதற்கு அவர்..அடா..அப்படிதாம்பா..சொன்னாங்க..ஏதோ ஒண்ணு..பாதியிலே வந்துருவாம்பா..அதனால உஷாரா..இருந்துங்கப்பா.. என்றார்.
உடனை கண்ணாயிரம்..அவரை பார்த்து..சரி..நீங்க சொல்லுறது சரிதான்..நான் கடைக்கு போறன்..என் கூடவாங்க..பேசிக்கிட்டே போவோம்..அந்த ரவுடி பினாயிலிலே வந்தா கொஞ்சம் சொல்லுங்க..நான் தப்பிச்சிடுறேன் என்றார்.
சரி,சரி உனக்காக வர்ரேன். நட என்றார் அவர்.
இருவரும்..புத்தக கடையை நோக்கி நடந்தார்கள். கடை வந்தது. கடைக்காரரிடம் இந்தி கற்றுக்கொள்வது எப்படி என்கிற புத்தகம்..கொடுங்க..என்றார்.
கண்ணாயிரம்.கடைக்காரர் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கொடுத்தார். விலை எவ்வளவு என்று கண்ணாயிரம் கேட்டார்.100ரூபாய் என்றார் கடைக்காரர். உடனே கண்ணாயிரம்..கொஞ்சம்..சொல்லிக்கொடுங்க..என்று கேட்டார். அதற்கு கடைக்காரர்.. ஏங்க..அதெல்லாம். சொல்லிக்கொடுக்கமுடியாதுங்க..என்றார். அதை கேட்டதும் கண்ணாயிரம் ஏங்க கொஞ்சமாவது சொல்லிக்கொடுங்க பிறகு..எப்படி வியாபாரம் பார்ப்பீங்க.. என்றார். கடைக்காரரோ அதெல்லாம்..முடியாதுங்க.. என்றார் மீண்டும். கண்ணாயிரம் உடனே..என்னங்க.இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க..புத்தகத்தை விலையை கொஞ்சம் குறைச்சு சொல்லி தந்தானே வாங்க முடியும் என்றார் கண்ணாயிரம்.கடைக்காரர் புரிந்து கொண்டு ஓ..நீங்க..அந்த சொல்லி கொடுக்க சொல்றீங்களா..நான் இந்த சொல்லின்னு நினைச்சேன் என்றார். கண்ணாயிரம் நீங்க எந்த சொல்லின்னு நினைச்சிங்க..என்று கேட்டார். கடைக்காரர் உடனே நீங்க இந்தி புத்தகத்தில் உள்ள பாடத்தை சொல்லித்தரச் சொன்னீங்களான்னு நினைச்சேன்.அது எனக்கு தெரியாதுல்லா. அதான் முடியாதுன்னேன்..என்றார். கண்ணாயிரம் சிரித்து கொண்டே..சரி சொல்லிக்கொடுங்க..விலையை என்றார். கடைக்காரர் புத்தகத்தை புரட்டி விலையை பார்த்துவிட்டு 100ரூபாய் என்று சொல்லிக்கொடுத்தார்.
கண்ணாயிரம் அவரிடம்..ஏங்க..இந்த சொல்லி இல்ல..அந்த சொல்லி..என்றார். கடைக்காரர் கடுப்பாகி எந்த சொல்லிங்க..புரியலையே..என்று சொன்னார். கண்ணாயிரம் ,அதுவா..புத்தகத்தின் விலையை குறைச்சு சொல்லிக்கொடுங்க என்றார்.
ஓ.அப்படியா..5 ரூபாய் டிஸ்கவுண்டு..95ரூபாய் கொடுத்து வாங்கிக்கீங்க..என்று சொன்னார். கண்ணாயிரம்.இன்னும் குறைச்சு தரமுடியாதா என்று கேட்டார்.கடைக்காரர் அவ்வளவுதான் குறைக்கமுடியும் என்றார். கண்ணாயிரம்…சரி ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் இல்லையா..என்று கேட்டார். அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லைங்க..கடையை நடத்துறதே பெரும்பாடா இருக்கு.. என்று சொன்னார். கண்ணாயிரம்..அப்படியா..என்று சொல்லிவிட்டு..நூறு ரூபாயை கொடுத்தார்.கடைக்காரர்..அதை வாங்கிக்கொண்டு இந்தி கற்றுக்கொள்வது எப்படி என்கிற புத்தகத்தையும் ஐந்து ரூபாயையும் கொடுத்தார்.
அவைகளை வாங்கிக்கொண்ட கண்ணாயிரம் வேறு புத்தகம் இருக்கிறதா என்று பார்த்தார். பெண்கள் உடல் எடையை குறைப்பது எப்படி என்ற புத்தகம் இருந்தது. கண்ணாயிரம் அதை பார்த்துவிட்டு..பூங்கொடிக்கு இந்த புத்தகத்தை வாங்கி கொடுக்கலாமே என்று நினைத்தார். இந்த புத்தகம் எவ்வளவு ரூபாய் என்று கேட்டார்.கடைக்காரர் புத்தகத்தை எடுத்து பார்த்துவிட்டு300ரூபாய் என்று சொன்னார்.
என்னங்க..இது அநியாயமா..இருக்கு..பெண்கள் உடல் எடையை குறைக்க புத்தகம்..300ரூபாயா.. என்றார் கண்ணாயிரம்.கடைக்காரர் உடனே ஆமா..படம் எல்லாம் போட்டிருக்கில்லா…விலை அதிகம்தான் என்று சொன்னார்.கண்ணாயிரம் உடனே இந்த புத்தகத்தை குறைச்சு கொடுப்பீங்களா..என்று கேட்டார்.
அதற்கு கடைக்காரர் குறைச்சியெல்லாம் தரமுடியாது. முழுசாதான் தரமுடியும் என்றார். கண்ணாயிரம் அப்படியா ரொம்ப தமாசா பேசிரீங்க..இப்ப எங்கிட்ட காசில்ல..பிறகு வந்து இந்த புத்தகத்தை வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.