June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு பயந்து ஆஸ்பத்திரி 4-வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

1 min read

Frightened by the corona, the young man committed suicide by jumping from the 4th floor of the hospital

20/1/2-022

கொரோனா தொற்றுக்கு பயந்து வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 30). குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

மயக்கமடைந்த அவரை குடும்பத்தார் மீட்டு குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு வாலிபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு கொரோனா சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதனால் பயந்து போன வாலிபர் கொரோனா தொற்று இருப்பதால் நான் பிழைக்க மாட்டேன் என இரவு முழுவதும் புலம்பியபடி இருந்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் ஆஸ்பத்திரி 4-வது மாடிக்கு சென்ற வாலிபர் அங்கிருந்து கீழே குதித்தார். இதில் வாலிபரின் தலை சிதறி ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.