இந்தியாவில் ஒரேநாளில் 2,86,384 பேருக்கு கொரோனா
1 min readCorona for 2,86,384 people in one day in India
27.1.2022
இந்தியாவில் ஒரேநாளில் 2,86,384 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்ப்பட்டது. அதே நேரம் 3.06 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள்:-
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,71,500 ஆனது. இன்று காலை வரைகடந்த 24 மணி நேரத்தில், 3,06,357 பேர் நலமடைந்ததால், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,76,77,328 ஆனது. தற்போது 22,02,472 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா காரணமாக ஒரே நாளில் 573 பேர் மரணமடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் இதுவரை 163.84 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 22,35,267 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.