May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள், 28 பேர் விடுதலை

1 min read

49 convicts, 28 acquitted in Ahmedabad serial blasts case

8/2/2022
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 28 பேரை விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டு உ்ளளது.

குண்டு வெடிப்பு

குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்ரான அகமாதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடர் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமர் 70 நிமிட இடைவெளியில் 21 வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலால் 56 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 240 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் பொது வளாகங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தேசம் முழுவதையும் அதிரவைத்தது. இந்த வழக்கில் 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவாளிகள்

இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 49 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. 26 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விசாரணை வரும் புதன் கிழமை(நாளை) தொடங்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.