June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 30,615 பேருக்கு கொரோனா; 514 பேர் சாவு

1 min read

Corona for 30,615 newcomers in India; 514 deaths

16/2/2022
இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. புதிதாக 30,615 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 514 பேர் இறந்தனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தய நாள் பாதிப்பான 27 ஆயிரத்து 409- ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரத்து 558 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 82 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 லட்சத்து 43 ஆயிரத்து 446 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

514 பேர் சாவு

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 173 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 675 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.