டெல்லி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த மக்கள்
1 min read
People taking selfies with First-Minister MK Stalin walking in a Delhi park
2/4/2022
டெல்லி பூங்காவில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
அவர் வியாழக்கிழமை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.
இதனை தொடர்ந்து பயணத்தின் 3-வது நாளான நேற்றுமுன்தினம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.
நடைபயிற்சி
இந்நிலையில், டெல்லி பயணத்தின் இறுதி நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரு பூங்காவில் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மக்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.