July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது- ரிசர்வ் வங்கி கவர்னர்

1 min read

Rising inflation is worrying- Reserve Bank Governor

8.4.2022
பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரெப்போ வட்டி

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதம் ஆகவே தொடரும்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது. வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35 சதவீதத்தில் இருந்து 3.75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

கவலை

பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனாவால் பொருளாதாரம் உயர்ந்தாலும் ஐரோப்பாவின் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது.
வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் சரி சமமான மட்டத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.