குரங்கிடம் சிக்கிய கண்ணாயிரம் சட்டை/நகைச்சுவை கதை
1 min read
Kannayiram’s shirt stuck to the monkey/ Story by Thabasukumar
15.4.2022
சிலம்பாட்டம் கற்றுக்கொள்ள சென்ற கண்ணாயிரம் பயில்வான் சொன்னதால் வெயிலில் ஒத்தக்காலில் நின்றதால் மயங்கிவிழுந்தார். அவரை அவரது மனைவி வீட்டுக்கு அழைத்து சென்றார். கண்ணாயிரம் பூங்கொடியின் தோளைபிடித்தபடி ஒற்றைக்காலில் நொண்டியபடி சென்றார்.
வீட்டுக்குள் சென்ற கண்ணாயிரம் அம்மா கால்வலிக்குது என்றபடி கட்டிலில் அமர்ந்தார். பூங்கொடி அவருக்கு காலை அமுக்கிவிட்டார்.
உடனே கண்ணாயிரம் ம…மெதுவா அமுக்கு…நீ …என்று இழுத்தார்.
உடனே பூங்கொடி கோபத்துடன்….நீ…என்ன நீ..நான் தடியா இருக்கேன்னு சொல்லுறீயளா…சொல்லுங்க…என்று கேட்டார்.
கண்ணாயிரம்…அதுவந்து ..இல்லை..என்று மழுப்பினார்.
பூங்கொடிவிடவில்லை.சொல்லுங்க…இல்லையா…ஆமாவா என்று கேட்டார்.கண்ணாயிரம் மெல்ல இல்ல…ஆமா என்று சொல்லிவிட்டு போர்வையை போர்த்திபடுத்துக்கொண்டார். இப்படி செஞ்சா கால்வலி போயிடுமா ..காலை கொடுங்க என்றார் பூங்கொடி.
கண்ணாயிரம் மெல்ல போர்வைக்குள்ளிருந்து ஒரு காலை மட்டும் வெளியே நீட்டினார் .பூங்கொடி ஒரு தைலத்தை எடுத்து தடவிவிட்டார். கண்ணாயிரம் அமைதியாக இருந்தார். அப்போது அவருக்கு மனதில் ஒரு எண்ணம் ஓடியது. பூங்கொடியும் நம்மள மாதிரி உடற்பயிற்சி செய்தால் ஒல்லியாகிடுவால்ல..அவளிடம் மெல்ல சொல்லணும் என்று நினைத்துகொண்டார். ஆனால் எப்படி சொல்வது என்று எண்ணியபடி இருந்தார்.
அந்த நேரத்தில் பூங்கொடி ஏங்க …ஒருநாள் உடற்பயிற்சி செய்ததற்கே…கால்வலிக்குது கைவலிக்குதுன்னு படுத்திட்டியள . .நாளைக்கு எப்படி சிலம்பாட்டம் கற்றுக்கிடுவீங்க. .என்று கேட்டார். உடனே கண்ணாயிரம் நாளைக்
கு லீவு என்றார். பூங்கொடி கோபத்துடன். . என்னது லீவா. .அதெல்லாம் கிடையாது. இன்னைக்கு ரெஸ்ட் நாளைக்கு பயிற்சி என்றார்.
கண்ணாயிரம் கண்கலங்கியபடி …நீயும் உடற்பயிற்சி செய்துபாத்தா தெரியும். என்று சொன்னார்.அதை கேட்டதும் பூங்கொடி. …நான் உ ங்கள மாதிரி. . .கால்வலிக்கு கைவலிக்குதுன்னு சொல்லமாட்டேன். எ
ன்றார்.
கண்ணாயிரம்…அப்படியா. நாளைக்கு நீ
யும் உடற்பயிற்சி பண்ணு நானும்
உடற்பயிற்சி பண்ணுறன். . யார் கால்வலிக்குன்னு சொல்லுறாங்கன்னு பார்ப்போம் .இது சவால் என்றார் .பூங்கொடியும் பார்ப்போம் என்று சொன்னார்
. கண்ணாயிரத்துக்கு. அடடா ..சவால்விட்டுவிட்டோமே… அதை சந்திக்கணுமே. பச்சமுட்டை சாப்பிட்டு
உடம்பை தெம்பாவச்சிக்கணும் என்று நினைத்தார்.மெல்ல ..பூங்கொடியிடம் ..பூங்கொடி. ..பச்சமுட்டையிலே. .பச்சமுட்டை ..அது கோழி முட்டைதான். பயில்வான் சொன்னாரு. அதை சாப்பிட்டா உடம்பு நல்லா இருக்கும்.அவரே முட்டைகடை வச்சிருக்காரு .குறைஞ்ச விலையிலே முட்டை தர்ரேன்னு சொன்னாரு. .என்று சொன்னார்
. அப்படியா. ..நீங்க போயி முட்டைவாங்கிட்டுவாங்க. அவிச்சுதர்ரேன். சாப்பிடுங்க ..என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம்….அதுவந்து ..அவர் முட்டையை பச்சையா குடிக்க சொன்னாரு.நான் என்ன செய்ய என்று கேட்டார்.அதற்கு அவர். .ஏங்க ஒரு முட்டையை அவிச்சு சாப்பிடுங்க ..ஒரு முட்டையை பச்சையா காலையிலே குடிங்க…அது ஒண்ணும் தப்பில்ல.. நீங்கபோயி ..முட்டைவாங்கிட்டுவாங்க என்றார்.
கண்ணாயிரம் மெல்ல எழுந்தார் .காலை நன்றாக உதறினார் .அப்பாட இப்பம் கொஞ்சம் கால்வலி இல்லை
என்று சொல்லியபடி கடைக்கு போக தயாரானார்.சட்டையை தேடினார் காணவில்லை. சட்டை எங்கே போச்சு …பூங்கொடி என்சட்டையை பாத்தியா என்றுகேட்டார். பூங்கொடி கோபத்தில் ஏ
ங்க. காலையிலே போட்டுட்டு போனீங்களே.. என்ன ஆச்சு என்று கே
ட்டார். கண்ணாயிரத்துக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அடடா… பயில்வானுக்கு பயந்து மூணு சட்டை போட்டுட்டு போனேன் .அவர் கழற்றிவை என்று சொன்னவுடன்..
மூணு சட்டையையும் கழற்றி மரத்தில் தொங்கவிட்டேன் .வரும் போது மறந்துவிட்டுட்டு வந்துட்டேன். …என்று புலம்பினார்.
அதை கேட்ட பூங்கொடி. ஏங்க…போயி முதல்ல அந்த சட்டையை எடுத்திட்டுவாங்க என்றுவிரட்டினார் .கண்ணாயிரம் மனதை நொந்தபடி வீட்டைவிட்டு வெளியே வந்தார்
. சட்டைகளை தொங்கவிட்ட மரத்தை தேடி மெதுவாக போனார். மரக்கிளையில் சட்டைகளை தொங்கவிட்ட இடத்தைபார்த்தார். சட்டைகளை காணவில்லை .அய்யோ…காணலய்யே…யாரும் தூக்கிட்டு போயிட்டாங்களோ தெரியலய்யே என்று முணங்கினார். அப்போது மரத்தின் உச்சியில் இரண்டு குரங்குகள் சண்டை போடும் சத்தம் கேட்டது. கண்ணாயிரம் தலைநிமிர்ந்து அந்த குரங்குகளை பார்த்தார். ஒரு குரங்கு அவரது ஒருசட்டையை போட்டிருந்தது. மற்ற இரண்டு சட்டைகளும் யாருக்கு சொந்தம் என்று இரண்டு குரங்குகளும் சட்டைகளை இழுத்து கொண்டிருந்தன .அதைபார்த்ததும் கண்ணாயிரம். .என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.
வே .தபசுக்குமார்.புதுவை.