சிறுமியை கற்பழித்த 86 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
1 min read
86-year-old man sentenced to life in prison for raping girl
22.4.2022
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 86 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சித்திரக்கார தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 86). இவர் கடந்த 2020-ம் ஆண்டு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குப்புசாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்து உள்ளார்.