தமிழ்நாட்டில் இருமொழிகொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
1 min read
Only bilingual policy will be implemented in Tamil Nadu – School Education Department Announcement
24.4.2022
தமிழ்நாட்டில் இருமொழிகொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் கூறியுள்ளார்.
இருமொரிக் கொள்கை
இருமொழிக்கொள்கையை மாற்றி மும்மொழி கொள்கையை புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக ஒரு நாளிதழில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும். 2006-ம் ஆண்டு சட்டத்தின் படி ஒவ்வொரு மாணவரும் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாய பாடமாக கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம்
தாய்மொழியாக தமிழ், இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக்கொளை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருகிறது. தெலுங்கும், கன்னடம், மலையாளம், உருது மாணவர்கள், தமிழுடன் தாய்மொழியை விருப்பப்பாடமாக தேர்வு எழுதும் முறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
தமிழ்மொழியுடன் தங்கள் தாய்மொழியை விருப்ப பாடமாக படித்து தேர்வெழுதும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். ஒவ்வொரு மாணவரும் 10-ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக கற்க சட்டப்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடக்கொள்கை குறித்த உண்மைக்கு புறம்பாக தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.