June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குரங்கை சமாளிக்க கண்ணாயிரம் டெக்னிக்./ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram of Techniques to Deal With Monkeys./ Comedy Story by Thabasukumar

8.5.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு மனைவியுடன் டூர் செல்ல திட்டமிட்டபோது அவரது மாமனார் அருவா அமாவாசை செல்போனில் பேசினார். அந்த போனை கண்ணாயிரம் மனைவி பூங்கொடி எடுத்து பேசியபோது.. அவரிடம் குற்றாலம் செல்லும் நிகழ்வை சொல்ல வேண்டாம் என்று கண்ணாயிரம் சொல்ல பூங்கொடியோ என்னசெய்வது என்று புரியாமல் கண்ணாயிரத்திடம் போனை கொடுத்து பேசுங்கள் என்றார்.கண்ணாயிரம் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறியபடி மாமா நல்லா இருக்கியளா…அங்கேவெயில் எப்படி ..இங்கே வெயில் எப்படி..என்று உளறினார்.
எதிர்முனையில் பேசிய அருவா அமாவாசை….என்ன மாப்பிள..வெயில் அதிகமாயிட்டா..என்னமோ பேசுறீங்க..என்க கண்ணாயிரம் அதுவந்து ஒண்ணும் இல்ல..சொல்லுங்க..என்று சமாளித்தார்.
அருவா அமாவாசை மெல்ல..வெயில் அதிகமானதால் உங்க ஊருக்கு வரலாமுன்னு நினைச்சேன்.. நீங்க குற்றலாம் போறீங்களா என்று கேட்க கண்ணாயிரமோ..அது யார் சொன்னது..பொய் என்று சொல்ல..
அருவா அமாசை என்ன மாப்பிளை நீங்கதான சொன்னீங்க…அதைநான் கேட்டேனே என்று சொன்னார்.
கண்ணாயிரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை.அது..உங்களிடம் சொல்லல..பூங்கொடியிடம்தான் அப்படி சொன்னேன்…நீங்க போனை ஒட்டுக்கேட்கக்கூடாது..சரியா என்றார்.
அருவா அமாசை உடனே..சரி..மாப்பிள்ளை..நீங்க குற்றாலம்போயிட்டுவாங்க..என்மகளை கூப்பிட்டுட்டு போங்க..நீங்க வந்தபிறகு நான்வர்ரேன்..போனை என் மகளிடம் கொடுங்க என்று சொன்னார்.
கண்ணாயிரம் பதட்டத்துடன் பூங்கொடியிடம் போனை கொடுத்தார். அவரிடம் அருவா அமாவாசை..என்னம்மா குற்றாலம் டூர்போறீயளா..என்று கேட்க..பூங்கோடி ..மெல்ல…அப்பா உங்க மாப்பிளை சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருக்காருப்பா..என்று சொல்ல அருவா அமாவாசை நீ பயப்படாதே..அவர் உன்னிடம் சொன்னதை நான் ஒட்டு கேட்டுட்டேன்..அதை அவரிடமே சொல்லிட்டேன்…அது பிரச்சினை இல்லை.நீங்க..குற்றாலத்துக்கு எப்படி போறீங்க…என்று கேட்க..பஸ்சிலதான் போறோம் என்று பூங்கொடி சொல்ல..அருவாஅமாவாசை அது இல்லம்மா..பஸ்சிலே அங்கே இங்கே ஏறிப்போவாதுங்க..பயில்வான் பரமசிவம் குற்றாலத்துக்கு டூர்கூட்டிடட்டு போறாராமே…என்னையும் கூப்பிட்டார்..நீங்க அந்த டூரிலே போயிட்டுவாங்க என்றார். பூங்கொடி..சரிப்பா..என்று சொல்ல அருவா அமாவாசை…அம்மா..மாப்பிளையோட போயிட்டுவா..பயில்வான்பரமசிவத்திடம் நான் காசு கொடுத்திடுறேன் என்க பூங்கொடியோ அது எதுக்கப்பா..நாங்களே..பாத்துக்கிறோம் ..உங்க மாப்பிள்ளை காசுவச்சிருக்காரு என்று சொல்ல அதை கேட்ட கண்ணாயிரம்…ஏய்..காசு கொடுத்தா வாங்கிக்க..என்னிடம் காசு இல்லைன்னு சைகையால் சொல்ல..அருவா அமாசை என்னம்மா..மாப்பிளை பணம் வேண்டாமுன்னு சொல்லுறாரா என்று கேட்க..பூங்கொடி ..பதில் சொல்லாமல் விழிக்க..கண்ணாயிரம் செல்போனைவாங்கி…மாமா..நீங்க வருத்தப்படக்கூடாது..அதுதான் முக்கியம்..அதனால..உங்க மகா குற்றாலம் போறதுக்கு பணம் கொடுத்திடுங்க என்றார்.
உடனே அருவா அமாவாசை ..என்ன மாப்பிள்ளை..என் மகா மட்டும்தான் குற்றாலம் போறாளா..நீங்க போகலையா..என்று கேட்க..கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது.செல்போனை பூங்கொடியிடம் கொடுத்தார்.பூங்கொடி உடனே…அப்பா என்கூட அவரும் வர்ராரு..இரண்டுபேரும்தான் குற்றாலம் போறோம் என்க..போயிட்டுவர்ரோமுன்னு சொல்லுமா..என்று அருவாஅமாசை சொல்ல பூங்கொடியும்..சரிப்பா நாங்க போயிட்டுவர்ரோம் என்றார்.
கண்ணாயிரம்…அப்பாட….அவரை சமாளிக்கமுன்னால பெரும்பாடாகிவிட்டது…மாமா பணம் கொடுத்திடுவாருல்ல…டூர்போறதுக்குரிய வேலையை பார்ப்போம்…என்று அவசரப்படுத்தினார்.பூங்கொடியும்…ஆமா..உங்க வேட்டி சட்டையெல்லாம் எடுத்துவையுங்க..அழுக்கா இருந்தா துவைத்து காயப்போடுங்க..வெளியிலேபோய்அயர்ன் பண்ணிகொண்டுவாங்க என்றார்.
கண்ணாயிரமும் குரங்கு தூக்கிட்டுபோன சட்டையை எடுத்துவைத்தார்.ரொம்ப அழுக்காகிட்டு..துவைக்கணும்..என்று அந்த சட்டைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனார்.தண்ணீரில் முக்கி சட்டையை நனையவைத்தார். சிறிது நேரம் கழித்து சோப்புபோட்டு சட்டையை தண்ணீரில் முக்கி அழுக்கை போக்கினார்.பின்னர் சட்டைகளை வெளியே எடுத்துவந்து காயப்போட்டார்.வேட்டியும் அழுக்காக இருப்பதுபோல் தெரிய …அதையும் தண்ணீரில் அமுக்கினார்..எடுத்து சோப்பு போட்டுவிட்டு வெளியேவந்து காயப்போட்டார்.
வெயில் நன்றாக அடித்தது.சட்டைகளும் வேட்டியும் விரைவாக காய்ந்துவிட்டன. கண்ணாயிரம் அவைகளை ஒருபையில் வைத்துக்கொண்டு அயர்ன் பண்ணுவதற்காக அருகில் உள்ள கடைக்கு போனார்.
நாங்க குற்றாலம் போறோம்..சட்டைகளை நல்லா அயர்ன் பண்ணி கொடுப்பா என்றார். அயர்ன் பண்ணுகிறவர் அந்த சட்டைகளைபார்த்துவிட்டு ..ஆ..இது குரங்கு சட்டைல்லா என்றார். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது.சட்டை என்னுடையது. குரங்கு போட்டிருந்துச்சு..என்று சொன்னார்.அயர்ன் பண்ணினவர்..அப்போ இது குரங்கு சட்டை இல்லைய்யா..உங்க சட்டையா என்று கேட்டார்.
கண்ணாயிரம் ஆமா.இது என் சட்டைதான்.நான்தான் தினமும் போடுறன்..ஒருநாள் குரங்கு போட்டதால அது குரங்கு சட்டையாகிடுமா..என்று கேட்டார்.
அயர்ன் பண்ணினவர் ..ஆமா.நீங்க சொல்லுறது சரிதான்..இது உங்க சட்டைதான்.ஆனா குரங்கு ஒருமுறை தூக்கிட்டுபோயிட்டுன்னா மறுபடி அந்த சட்டையைபோடமாட்டாங்க…ஏன்னா திருப்பி
போட்டுட்டுபோனா மத்த குரங்குக அந்த சட்டையைபாத்து உங்களவிரட்டும்..நீங்க வேற குற்றாலத்துக்கு போகணுமுன்னு சொல்றீங்க..அங்கே குரங்கு அதிகம்..என்றார்.
கண்ணாயிரத்துக்கு பகீர் என்றது.ஆனாலும் சமாளித்துக்கொண்டு…நான்தான் சட்டைபோட்டு அதுக்குமேல துண்டைபோட்டு மூடிக்குவேனே.குரங்குக்கு எப்படி தெரியும்..கண்ணாயிரமா…கொக்கா..என்றார். அயர்ன் பண்ணியவர்..உங்களைவிட குரங்கு ரொம்ப புத்திசாலி…புரியுதா என்றார்.

புரியுது..என்றுசொன்ன கண்ணாயிரம் ஆமா இங்க நடந்தது..குற்றாலத்தில் உள்ள குரங்குக்கு எப்படி தெரியும் என்று கேட்க…குரங்குக்கும் மோப்ப சக்திஉண்டு தெரியுமா என்று அவர் சொல்ல கண்ணாயிரம் ம்..நான்தான் சட்டைக்கு நல்லா சோப்புபோட்டு துவைச்சிட்டேனே..எந்தவாடையும் அடிக்கல..அதனால குரங்குக்கு மோப்பம்பிடிக்க முடியாது என்றார் கண்ணாயிரம்.
அயர்ன் பண்ணியவர்..சரி..எதுக்கும் உஷாரா இருங்க…என்றபடி அயர்ன் பண்ணிய சட்டைகள் மற்றும் வேட்டியை கொடுத்தார்.அதற்குரிய காசை கொடுத்துவிட்டு கண்ணாயிரம் வேட்டி சட்டைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குவந்தார்.

பூங்கொடியிடம் குரங்கு பற்றி அயர்ன் பண்ணியவர் சொன்ன எச்சரிக்கையை சொன்னார்.பூங்கொடியோ..ஏங்க..அதெல்லாம் பொய்…குரங்கெல்லாம் தேடிவராது..நீங்க பயப்படாதீங்க…உங்க வேட்டி சட்டைகளுக்கு சென்டு அடிச்சிடுவோம்…ஒண்ணும் தெரியாது..என்று சமாதானப்படுத்தினார்.
உடனே கண்ணாயிரம் சென்டுபாட்டிலை எடுத்துவந்து வேட்டி சட்டைகளில் சென்டு அடித்தார்.நல்லாவாசம் அடிக்கு…பரவாயில்ல..என்றவர் வேட்டி சட்டைகளை எடுத்து சூட்கேசில்வைத்தார். வீடெல்லாம் சென்ட்வாசமாக இருந்தது.பூங்கொடி ஏங்க சென்டை காலிபண்ணிடாதீங்க..எனக்கும் வேணும் என்று சொல்ல கண்ணாயிரம்…சரி…சரி.. என்று சொல்லியவாறு சென்டுபாட்டிலை கொண்டு மேசையில்வைத்தார்.
பூங்கொடியும் தனது சேலைகளையும் சட்டைகளையும் அயர்ன் பண்ண ஒருபையில்வைத்துக்கொண்டு அருகில் உள்ள கடைக்கு போனார்.அங்கு குற்றாலம் டூர்போற பெண்கள் துணிகளை அயர்ன்பண்ணுறதுக்காக கூட்டமாக நின்றார்கள். என்ன இவ்வளவு கூட்டம் என்று பூங்கொடி அயர்ன் பண்ணியவரிடம் கேட்க அவரோ…எல்லாம் கண்ணாயிரம்தான் காரணம்..அவர் குற்றாலம் போறதுக்காக சட்டையை அயர்ன்பண்ணுறதா சொன்னாருல்ல…அதைபார்த்துட்டு எல்லாரும் வந்துட்டாங்க..நீங்க ஒருமணி நேரம் கழிச்சுவாருங்களா..நான் அயர்ன் பண்ணிவைக்கிறேன்..என்றார்.
பூங்கொடியும் சரி என்றபடி புடவைகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். கண்ணாயிரத்த சத்தம் போடலாமுன்னு வேகமாக வீட்டுக்குள் போனார்.அங்கு கண்ணாயிரத்தை காணவில்லை.


வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.