ஏணியிலிருந்துவிழுந்த கண்ணாயிரம்.
1 min read
Kannayiram fell from the ladder/ Story by Thabasukumar
11.5.2022
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு டூர் செல்ல தனது சட்டைகள் மற்றும் வேட்டியை அயர்ன் பண்ண சென்ற கடைக்காரரிடம் குற்றாலம் செல்ல இருப்பதை மகிழ்ச்சியுடன் சத்தமாக சொன்னார். இதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டு கண்ணாயிரமே வேட்டி சட்டையை அயர்ன்பண்ணி குற்றாலத்துக்கு புறப்படும்போது நாம்மட்டும் சும்மாபோறதா என்று நினைத்தனர். அயர்ன்பண்ணுகிற கடைக்கு துணிகளுடன் படையெடுத்தனர். கண்ணாயிரம் அந்த கடையிலிருந்து வந்தபின் பூங்கோடியும் சேலை சட்டையை அயர்ன்பண்ண கொடுக்க சென்றபோது அங்கே ஒரே கூட்டம். இதுக்கு காரணம் கண்ணாயிரம்தான் என்பதை அறிந்த பூங்கோடி சேலை சட்டையை கடலக்காரரிடம் அயர்ன்பண்ண கொடுத்துவிட்டு கண்ணாயிரத்தை திட்டலாம் என்று வீட்டுக்கு வேகமாகவந்தார். ஆனால் அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி…ஏங்க…ஏங்க என்று சத்தம்போட்டு கூப்பிட்டார்.சத்தம் இல்லை.ஆனால் மச்சியில் ஏதோ உருட்டுவதுபோல் சத்தம் கேட்டது. மச்சியில் ஏறுவதற்கு ஏணி சுவரில் சாத்திவைக்கப்பட்டிருந்தது. ஏணி பலமில்லாமல் இருந்தது.பூங்கொடி ஏணியில் ஏறினால் ஏணி உடைந்துவிடும். கண்ணாயிரம் மச்சியில்தான் இருக்கவேண்டும் என்று பூங்கொடி முடிவுசெய்தார். ஏங்க..அங்கே என்ன பண்ணுறீங்க…இறங்கி கீழேவாங்க என்று சத்தம்போட்டார்.
கண்ணாயிரம்…இரு…சூட்கேசை தேடுறன்..இன்னும் கிடைக்கல…அதைத்தான் தேடுறன் என்றார்.
அதற்கு பூங்கொடி…ஏங்க எந்த சூட்கேசை தேடுறீங்க…பழைய சூட்கேசா அது கிழிஞ்சிபோச்சுன்னு தூக்கிபோட்டுட்டன்.கீழே இறங்கிவாங்க என்றார். கண்ணாயிரம்…ம்..தூக்கிபோட்டிட்டியா…அதிலே என் கருப்பு கண்ணாடி தொப்பி எல்லாம் வச்சிருந்தேனே..அது என்ன ஆச்சு….என்று கேட்டார்.
அதுவா…அதுவா என் பெட்டியிலேதான் வச்சிருக்கேன்..கீழே இறங்கிவாங்க என்று பூங்கொடி அதட்டினார். இதோவர்ரேன் என்றபடி கண்ணாயிரம் கீழே இறங்க மச்சியிலிருந்து எட்டிப்பார்த்தார். அவரது காலில் நடுக்கம்…பூங்கொடி..ஏணியை நல்லாபிடிச்சிக்கோ…எனக்கு பயமா இருக்கு என்றார்.பயமா இருந்தால் ஏன் மச்சிக்கு போனிங்க..பாத்து இறங்குங்க…என்றபடி பூங்கொடி ஏணியை கெட்டியாக பிடித்துகொண்டார்.
கண்ணாயிரம் ஏணியில் மெல்லகால்வைத்து இறங்க முயன்றார். ஏணி ஆடியது. ஏய்…ஏணி ஏன் ஆடுது…சரியாபிடி என்று கண்ணாயிரம் கத்தினார்.
உடனே பூங்கொடி…ஏணி ஆடலங்க….உங்க கால் ஆடுது…அதான் உங்களுக்கு ஏணி ஆடுனமாதிரி தெரியுது..கால்நடுங்காம…இறங்குங்க..என்றார்.
கண்ணாயிரம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு…ஏணியைபிடித்து இறங்கினார்.கை ஆடியது. ஏய்..பூங்கொடி..ஏணியைவிட்டுறாத…நல்லாபிடிச்சுக்கோ…என்று சொன்னார்.
ம்…சீக்கிரம் இறங்குங்க..இந்த ஏணியிலிருந்து இறங்க…இந்த…பயம் பயப்புடுறீங்க. .இரண்டுபடிதான் இறங்கியிருக்கீங்க…இன்னும் பதினைந்துபடி இறங்கணும்.. சீக்கிரம் என்றார் பூங்கொடி.
அதை கேட்ட கண்ணாயிரம்..நீ வேற அவசரப்படுத்தாத..நானே பயந்துபோயிருக்கேன் என்று சொன்னார். கண்ணாயிரம் மெல்ல மெல்ல ஒவ்வோருபடியாக கால் எடுத்துவைத்தார். அப்போது பூங்கொடி செல்போனுக்கு கால்வந்தது .அவ்வளவுதான் பூங்கொடி ஏணியை பிடித்திருப்பதை மறந்து ஓடிப்போய் செல்போனை எடுத்து பேசினார். எதிர்முனையில் அருவா அமாவாசை பேசினார். எம்மா..நீங்க குற்றாலம் போறதுக்கு பயில்வானிடம் பணம் அனுப்பிட்டேன்..பத்திரமா போயிட்டுவாங்… என்று சொல்லிமுடிப்பதற்குள்..டம் என்று சத்தம் கேட்டது. ஏணி சரிந்துவிழுந்து..கண்ணாயிரம்…அம்மா என்று அலறியபடி விழுந்துகிடந்தார்.
அருவா அமாசை…அங்கே என்னம்மா சத்தம்..என்று கேட்க ஓண்ணும் இல்லப்பா..பிறகு பேசுறன் என்று பூங்கொடி இணைப்பை துண்டித்தார்.
கண்ணாயிரத்தை நோக்கி ஓடினார். என்னங்க..ஒரு ஏணியைபார்த்து ஒழுங்கா இறங்க தெரியாதா..என்று சத்தம் போட்டபடி அவரை தூக்கினார்.
கண்ணாயிரம்..நீ ஏன் ஏணியைவிட்டுட்டு போன.. நீபோகும்போது சொல்லிவிட்டுபோகலாமுல்ல…என்றபடி கண்ணாயிரம் தள்ளாடியபடி எழுந்தார்.
அப்பாட..ஏணியிலே இனி ஏறக்கூடாது…என்றபடி கை, கால்களை உதறினார்.
பின்னர் பூங்கொடி..சரிந்து கிடந்த ஏணியை நிமிர்த்தப்பார்த்தார்.அது நிற்கவில்லை. ஏணியின் கீழ்பகுதி உடைந்திருந்தது..அதைப்பார்த்த பூங்கோடி..அய்யோ..ஏன் ஏணியை உடைச்சிப்புட்டிங்க..எவ்வளவு நாளா இருந்துச்சு தெரியுமா..எங்க தாத்தா காலத்தில இருந்து பயன்படுத்திட்டுவர்ரோம்..இப்படி உடைச்சிட்டியளே என்றார்.
அதை கேட்ட கண்ணாயிரம்.. ஏணி புதுசோன்னு நினைச்சேன்…பழசா…அப்பாடி..வேற ஏணிவாங்குவோம் என்றுசொல்ல கண்ணாயிரத்தை பூங்கொடி முறைத்துபார்த்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை