May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 98 people in Tamil Nadu today

31.5.2022
தமிழகத்தில் இன்ற 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,474 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,16,907ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.