June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரம் சாப்பிட்ட காந்தா பிரியாணி/ நகைச்சுவை கதை

1 min read

Kannayiram ate Kantha Priyani / Story by Thabasukumar

12.6.2022

கண்ணாயிரம் தன்மனைவி பூங்கொடியுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜவுளிக்கடைக்காரர் கண்ணாயிரத்தின் செல்போனில் வந்து பேசினார். கண்ணாயிரம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு வாங்கி கொடுத்த சேலைக்குரிய பணத்தை கேட்டு தொந்தரவு செய்ததால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கால்சட்டைபைக்குள் போட்டுவிட்டு அமைதியாக இருந்தார் .ஆனால் சுடிதார்சுதாவின் போனில்வந்து மீண்டும் ஜவுளிக்கடைக்காரர் தொந்தரவு கொடுத்ததால் கண்ணாயிரம் டென்சனாகி உளர ஆரம்பித்தார். இதனால் பூங்கொடி கோபம் அடைந்து சுடிதார்சுதாவுடன் சண்டைபோட அதை தடுக்கவந்த கண்ணாயிரத்தை இருவரும் தள்ளிவிட்டதால் கண்ணாயிரம் கீழேவிழுந்து அவரது உதடுவீங்கியது.
இந்தநிலையில் கண்ணாயிரம் நம்பர் ஓன்வந்து தள்ளாட அவசரமாக டிரைவர் பஸ்நிறுத்த கண்ணாயிரமும் மற்றவர்களும் பஸாசிலிருந்து இறங்கி காட்டுபகுதிக்குள் ஓதுங்கினார்கள்.
சிறிது நேரத்தில் டிரைவர் ஹாரன் அடிக்க கண்ணாயிரம் வேகமாக ஓடிவந்து பஸ்சில் ஏறினார். சுடிதார் சுதா மற்றும் பூங்கொடி ஆகியோர் ஓருவரையொருவர் முறைத்தபடி பஸ்சை ஏறினார்கள். பயில்வான் ..எல்லோரும் பஸ்சில் ஏறியாச்சா..என்று கேட்டார். காட்டுக்குள்ளிருந்து இரண்டு பேர்..கொஞ்சம் நிக்கட்டும்..இதோவந்து விடுகிறோம் என்றபடி அங்குள்ள குளந்தங்கரைக்கு சென்று கால் கழுவிவிவிட்டு…அப்பாட.என்று பெரு மூச்சுவிட்டபடி பஸ்சை நோக்கி நடந்துவந்தார்கள். சீக்கிரம் வாங்க என்று பயில்வான் கத்த அவர்கள்..இதோவந்துட்டோம் என்றபடி ஓடிவந்து பஸ்சில் ஏறினார்கள்.
பயில்வான்.சீட்டுகளை சரிபார்த்துவிட்டு…டிரைவர் சார்..புறப்படலாம் என்றார். பஸ் சின்ன குலுக்கலுடன்…புறப்பட்டது. கண்ணாயிரம் அடுத்து எந்த செல்போனில் வருவாரோ என்ற கலக்கத்தில் இருந்தார். பயில்வான் அதை புரிந்துகொண்டு…கண்ணாயிரம்..ஏன் பதட்டமாக இருக்கீங்க..என் பக்கத்திலேவாங்க..உட்காருங்க…ஜாலியா கதை பேசிக்கிட்டே போவோம் என்றார்.
கண்ணாயிரத்துக்கும் அது சரி ஏன்றுபட்டது. ஒருபாதுகாப்பாக இருக்கட்டுமே என்றபடி பயில்வான் அருகில்போய் உட்கார்ந்துகொண்டார். அவருக்கு மனதில் தைரியம்வந்தது.
பயில்வான் அவரிடம்…கண்ணாயிரம் உனக்கு போன்வந்தா நானே பேசி சமாளிக்கிறேன்.. கண்ணாயிரம் வாயில் அடிபட்டு சரியா பேசமுடியலன்னு சொல்லிடுறன்…என்ன..நீ தைரியமாக இரு என்று சொன்னார். கண்ணாயிரம் உதட்டை எச்சிலால் தடவியபடி உ..ஊ.என்றார்.
பஸ் வேகமாக கடலூரை நோக்கி பறந்தது.மணி ஒருமணியை நெருங்கியது. அனைவருக்கும் பசி வயிற்றைக்கிள்ளியது. டிரைவர்சார்…நல்ல ஓட்டல்பார்த்து நிப்பாட்டுங்க என்றார். டிரைவர் புன்னகையுடன் தலையை ஆட்டினார். கடலூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நிறுத்தினார். பஸ்சிலிருந்து சுடிதார் சுதாவை தவிர அனைவரும் இறங்கினார்கள். சுடிதார்சுதா..இறைச்சிக்கடைக்காரர் வாங்கித்தந்த பிரியாணி பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார். அந்தவாடை அடித்ததும் கண்ணாயிரத்துக்கும் பிரியாணி சாப்பிடும் ஆசைவந்தது. ஓட்டலுக்குள் மனைவி பூங்கொடியுடன் சென்றார். நல்ல இடம்பார்த்து இருவரும் அமர்ந்தார்கள். சர்வர் வந்து அவர்களிடம் என்ன வேணும் என்று கேட்டார். கண்ணாயிரம் உதட்டை நாக்கால் தடவியபடி..இரண்டு சிக்கன் பிரியாணி என்றார். சர்வர் சிரித்தபடி…இதுவிஜிட்டேரியன் ஓட்டல் என்று சொன்னார். கண்ணாயிரமும் சிரித்தபடி அதனால் என்ன..எங்களுக்கு இரண்டு சிக்கன்பிரியாணி கொடுங்க என்றார். சர்வர் கோபத்தை அடக்கிக்கொண்டு…சார்..இது சைவ ஓட்டல்…இங்கே அசைவம் கிடையாது..என்று சொன்னார்.
அதற்கு கண்ணாயிரம்..அட…என்னங்கப்பா..எங்க ஊரில…ஒரே ஓட்டலில இரண்டும் கிடைக்கும்..நீ ஏன்னடான்னா பிரியாணி இல்லங்கிற ..என்று அலுத்துக்கொண்டார்.
சர்வர் மெல்ல…சார் பக்கத்து ஓட்டலுக்கு போங்க..நீங்க கேட்கிறதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார்.: கண்ணாயிரமும் பூங்கொடியும் எழுந்து பக்கத்து ஓட்டலுக்கு நடந்து சென்றார்கள். அது அசைவ ஓட்டல்..உள்ளே எட்டிப்பார்த்ததுமே..பிரியாணி மணம் தூக்கியது.
அடடா..என்னமணம்..என்ன மணம்..என்றபடி ஒரு மேஜைமுன்னால் உள்ள நாற்காலிகளில் கண்ணாயிரம் தன்மனைவியுடன் அமர்ந்தார்.சர்வர்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தார்கள்.கண்ணாயிரத்தை யாரும் கவனிக்கவில்லை.கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது.என்னங்க…நாங்க காத்திருக்கிறோம்..யாரும்வந்து ஓண்ணும் கேட்கமாட்டிங்க..என்று கேட்டார்.ஒரு சர்வர் அருகில்வந்து..அந்த மேஜையில் சர்வீஸ் கிடையாது..எழுந்து இந்த டேபிளுக்கு வாங்க ஏன்றார்.கண்ணாயிரம்..ம்..அந்த டேபிள் ரொம்ப சுத்தமா இருக்கேன்னு நினைச்சேன்…சரிபரவாயில்லை..நீங்க சொல்லுற டேபிளிலே இருக்கோம் என்றபடி அந்த டேபிளில் இருந்தனர்.ஒரு சர்வர்வந்து…காடைபிரியாணி முட்டைபிரியாணி மட்டன் பிரியாணி சிக்கன்பிரியாணி வான்கோழிபிரியாணி இருக்கு..உங்களுக்கு எந்தபிரியாணி வேண்டும் என்று கேட்டார்.கண்ணாயிரம் உடனே…சுடிதார்சுதா சாப்பிடும் பிரியாணி வேணும்..என்றார்.அதைகேட்ட சர்வர் புன்னகையுடன்..அந்த பிரியாணியை நீங்க சுடிதார்சுதாவிடம்தான் கேட்கணும்…என்றார்.கண்ணாயிரம் உஷாராகி…யோவ் சுடிதார்சுதா சாப்பிடும் பிரியாணி எங்களுக்கு எதற்கு..அதேமாதிரி பிரியாணியை கொடுய்யா என்றார்.சர்வருக்கு கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது.ஏங்க..சூடிதார் சுதா யாருங்க…அவங்க என்ன நடிகையா…அவங்க என்ன பிரியாணி சாப்பிடுவாங்கன்னு எனக்கு எப்படி தெரியும் என்றுவாதாடினார்.கண்ணாயிரத்துக்கு எரிச்சலாக இருந்தது…என்னங்க..உங்களுக்கு சுடிதார் சுதாவை தெரியாதா..போங்க..ஹ..போங்க..என்று கண்ணாயிரம் சிரித்தார்.சர்வர் பற்களை கடித்துகொண்டு சண்டைக்கு தயாரானபோது…மற்றோரு சர்வர் நிலைமையை புரிந்துகொண்டு…அங்கேவந்தார்.தம்பி..நீங்க…அந்த டேபிளை பாருங்க..நான் அவங்கள கவனிச்சிக்கிறேன் என்றார்.
அந்த இளைஞரும்..ஆ.ஆளைவிட்டாபோதும் என்று அடுத்த டேபிள் கஸ்டமரை கவனிக்க சென்றார். வயதான சர்வர் மெல்ல கண்ணாயிரம் அருகில் வந்து..வணக்கம்..சுடிதார்சுதா சாப்பட்ட பிரியாணி எதற்கு.. அதைவிட நடிகை காந்தா சாப்பிட்ட சிக்கன்பிரியாணி இருக்கு..சூப்பரா இருக்கும்.அவங்க வந்தா எங்க ஓட்டலிலேதான் சாப்பிடுவாங்க…அவ்வளவு டேஸ்டு..கொண்டு வர்ரேன் சாப்பிட்டு பாருங்க என்றார். கண்ணாயிரம் மனம் குளிர்ந்தது. நடிகை காந்தா சாப்பிட்ட பிரியாணியே இரண்டு கொண்டுவாங்க என்று சொன்னார். சர்வர் உற்சாகமாக பிரியாணி கொண்டுவரசென்றார். கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன்..ஏய் பூங்கொடி இன்னைக்கு நாம நடிகை காந்தா பிரியாணி சாப்பிடப்போறோம்…ஊரிலேபோய் சொல்வோம் என்றார். பூங்கொடியும்..ம்.சுடிதார்சுதாவுக்கு போட்டியா நல்ல பிரியாணி சாப்பிடணும் அவ்வளவுதான் என்றார்.
கண்ணாயிரம்…சரி..சரி..நடிகை காந்தாபிரியாணி சாப்பிட்டபிறகு..சுடிதார் சுதாவிடம் சண்டை போடக்கூடாது என்றார். பூங்கொடியும் பார்ப்போம் என்று சொன்னார்.
அந்த நேரத்தில் இரண்டு வாழை இலைகளை போட்டார்.கண்ணாயிரமும் பூங்கொடியும் வாழை இலையில் தண்ணீர்தெளித்து கழுவினார்கள்.சர்வர் இரண்டு பிளேட்டுகளில் சிக்கன்பிரியாணி கொண்டுவந்து இலையில் கொட்டினார். ஆளுக்கொரு லெக்பீஸ் வைத்தார். பிரியாணி சூடாக மணத்தது.
ஆ.ஹஹா.நடிகை பிரியாணின்னா…நடிகை பிரியாணிதான்..பேஷ் பேஷ்…என்று பாராட்டியபடி கண்ணாயிரம் சாப்பிடத்தொடங்கினார்.
ஒருவாய்வைத்ததும்…ஆகாந்துது என்று கத்தினார்.
காந்தா பிரியாணின்னா காந்ததான் செய்யும் சாப்பிடுங்க…சாப்பிடுங்க என்றார் பூங்கொடி. ஆனால் கண்ணாயிரத்துக்கு அடிபட்டு உதடு கிழிந்திருந்ததால் உரைப்பு தாங்காமல்..ஆ..ஊ..என்று கத்தினார்.
தண்ணி குடிங்க..தண்ணி குடிங்க…என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் ஜக்கிலிருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று குடித்தார் (தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.