June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இனி எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை- யஷ்வந்த் சின்ஹா திட்டவட்ட அறிவிப்பு

1 min read

No more intention to join any party- Yashwant Sinha categorical announcement

26.7.2022
தான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும்சுதந்திராமாக இருக்கப் போவதாகவும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா

ஜனாதிபதி தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா தோல்வியைத் தழுவினார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹா, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக, மார்ச் 2021-ல் திரிணாமூல் ககாங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதற்கு முன்பு அவர் 2018 வரை பா.ஜ.க-வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய அவர், ” நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை. நான் சுதந்திராமாக இருக்கப் போகிறேன்” என யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். . “இப்போது எனக்கு 84 வயதாகிறது. எவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும். பொது வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.