June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மராட்டிய மாநிலத்தில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம ஒலி

1 min read

Mysterious sound coming from underground in Maratha state

14.9.2022
மராட்டிய மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம ஒலி வந்தது. இதனால் அந்த ஊர் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

மர்ம ஒலி

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். கடந்த செப்டம்பர் 6 ந்தேதி முதல் இந்த கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்ம சப்தங்கள் கேட்கின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் இந்த பகுதியில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை என தெரிவித்து உள்ளனர். இதே பகுதியில் 1993 இல் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு 9,700 க்கும் அதிகமான உயிர்கள் இழப்பு ஏற்பட்டு உள்ளது. லத்தூர் மாவட்ட கலெக்டர் பிருத்விராஜ் நேற்று இந்த கிராமத்திற்கு சென்று மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மராட்டிய மாநிலம் நாந்தேட்டின் சுவாமி ராமானந்த் தீர்த் மராத்வாடா பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நேற்று கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்துவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.