அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல்
1 min readMinister Anbil Poiyamozhi has swine flu
28.9.2022
பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காய்ச்சல், உடல் சோர்வு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். மருத்துவமனையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது. டாக்டர்களின் ஆலோசனைப்படி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அவருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.