May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

எஞ்சின் பழுதானதால் நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படை மீட்டது

1 min read

Indian Navy rescued Tamil Nadu fishermen stranded in the middle of the sea due to engine failure

30.9.2022
எஞ்சின் பழுதாகி இலங்கை அருகே சிக்கி தவித்த பூம்புகார் மீனவர்களை இந்திய கடற்படை காப்பாற்றி மீட்டது.

மீனவர்கள்

பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி, விசைப்படகில் 16 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகின் எஞ்சின் பழுதடைய, 7 மீனவர்கள் மட்டும் மீன்பிடி படகும் மூலம் கரை திரும்பி தகவல் அளித்தனர். இதனிடையே, பழுதடைந்த விசைபடகு காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்ல, வந்து மீட்டு செல்லும் படி இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய கடற்ப​டை​ 9 மீனவர்கள் மற்றும் படகையும் பாதுகாப்பாக மீட்டு வந்தது. இதையடுத்து, சொந்த ஊர் திரும்பிய மீனவர்களை, கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.