May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 3,011 பேருக்கு கொரோனா

1 min read

3,011 new cases of corona in India

3.10.2022
இந்தியாவில் ஒரு நாளி்ல் புதிதாக 3,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை வெளியான சுகாதாரத்துறை அறிக்கையின் படி, புதிதாக 3,805 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது, ஞாயிற்றுக்கிழமை புதிதாக 3,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இந்த நிலையில் இன்று 3,011 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 4,45,97,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது 36,126 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 4,301 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,32,671 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு:

28 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை வெளியான சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கொரோனா பாதிப்பு காரணமாக 18 பேர் பலியான நிலையில், இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் அதிகபட்சமக 20 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,701 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.