தென்காசி மாவட்டத்தில் கிராம உதவியாளர்கள் நியமனம்: கலெக்டர் தகவல்
1 min read
Appointment of Village Assistants in Tenkasi District: Collector Information
11.10.2022
தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்க்கண்ட விபரப்படி தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், தகுதியான நபர்களின் உரிய கல்வித்தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவுத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை மூலமாக நிரப்பப்பட உள்ளன.
எனவே கீழ்க்குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய நபர்கள் 10.10.2022 முதல் 07.11.2022 மாலை 5.45 மணி வரை இணையதளம் மூலமாக கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு; உரிய விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தென்காசி வட்டத்தில் குணராமநல்லூர், ஆவுடையானூர், ஆழ்வார்குறிச்சி பகுதி-2 கீழஆம்பூர், பாட்டபத்து, பாட்டாக்குறிச்சி, சில்லரைப்புரவு, குத்துக்கல்வலசை, சிவசைலம்; ஆகிய 9 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
செங்கோட்டை வட்டத்தில் கணக்கபிள்ளைவலசை, நெடுவயல்,வல்லம், இலத்தூர், வடகரைகீழ்பிடாகை, நாகல்காடு ஆகிய 6 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
ஆலங்குளம் வட்டத்தில் அணைந்தபெருமாள்நாடானூர், துப்பாக்குடி, சிவலார குளம், மாறாந்தை, கீழப்பாவூர் பகுதி -2, மாயமான்குறிச்சி, சுப்பையாபுரம், நெட்டுர் ஆகிய 8 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
வீரகேரளம்புதூர் வட்டத்தில் இராஜகோபாலபேரி, வாடியூர், வீராணம், வடக்குகாவலாக்குறிச்சி, வெள்ளகால், ஆனைகுளம் ஆகிய 6 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
கடையநல்லூர் வட்டத்தில் நயினாரகரம், சேர்ந்தமங்கலம், கடையநல்லூர், கிளாங்காடு, பொய்கை, புளியங்குடி, சிந்தாமணி, தலைவன்கோட்டை, தி.நா.புதுக்குடி, நகரம்.
ஆகிய 10 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
சங்கரன்கோவில் வட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர், வடக்குபுதூர், சங்கரன்கோவில், பந்தபுளி, பனையூர் ஆகிய 5 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
சிவகிரி வட்டத்தில் இனாம்கோவில்பட்டி, இராமநாதபுரம். அரியூர் ஆகிய 3 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
திருவேங்கடம் வட்டத்தில் வாகைகுளம், கலிங்கப்பட்டிபகுதி-1, திருவேங்கடம், சுப்பையாபுரம், மருதங்கிணறு, மதுராபுரி ஆகிய 6 கிராமங்கள் காலிபணியிடங்களாக உள்ளது.
விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டியஆவணங்கள்
இருப்பிடச் சான்று ஒளிநகல், சாதிச்சான்று ஒளிநகல், வேலைவாய்ப்பு பதிவுஅட்டை ஒளிநகல், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒளி நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதிசான்று ஒளிநகல்கள், பிறப்புசான்று, ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரியஅடையாளஅட்டைநகல், முன்னாள் இராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டைநகல், இரு சக்கர, நான்குசக்கர வாகனஓட்டுனர் உரிமம் நகல் (01.07.2022க்குள் முந்தையது)
விண்ணப்பத்தாரர் தகுதிகள்
ஒருவருவாய் கிராமத்திற்குஒருவிண்ணப்பம் மட்டுமே அளிக்கவேண்டும்.
சம்பந்தப்பட்டவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமேவிண்ணப்பம் செய்யவேண்டும்.
சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களைச் சேர்ந்தவர்கள், இதரமாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (01.07.2022 அன்று) 1.07.2022 அன்று 21வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சவயது 32, இதரவகுப்பினருக்குஅ திகபட்ச வயது 37 ஆகும். (மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவைமற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்.)
தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்கதெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். எந்தவிதகுற்றவழக்கிலும் ஈடுபடாதவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் கணவரோ ஃ மனைவியோ உயிருடன் இருக்கும் பொழுது வேறுதிருமணம் செய்தவராக இருக்கக் கூடாது. விண்ணப்பத்துடன் அனைத்துசான்றுகளின் சான்றொப்பமிட்டநகல்கள் இணைக்கப்படவேண்டும். விண்ணப்பதாரர் தமதுவிண்ணப்பத்திற்காக எவ்விதசிபாரிசும் நாடக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in ல்,வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் https://cra.tn.gov.in-ல் மற்றும் தென்காசி மாவட்ட இணையதளம்
http://tenkasi.nic.in–ல்விண்ணப்பிக்கலாம். தேர்வுமுறை, இனசுழற்சிகுறித்த இதர விபரங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரியில்; http://tenkasi.nic.in-ல்
தனித்தனியாக இணைப்புகளில் கிளிக் செய்துஅறிந்து கொள்ளலாம். மேலும்; சம்பந்தப்பட்டவருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ்; தெரிவித்துள்ளார்.