June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சாகித்ய அகாடமி விருது பெற்ற கேரள எழுத்தாளர் டி.பி.ராஜீவன் மரணம்

1 min read

Sahitya Akademi award-winning Kerala writer DP Rajeevan passes away

3.11.2022
சாகித்ய அகாடமி விருது பெற்ற கேரள எழுத்தாளர் டி.பி.ராஜீவன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான இவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி(யுடிஎப்) அரசாங்கத்தின் போது கலாச்சார அமைச்சரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
கவிதைகள், பயணக்கட்டுரைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள டி.பி. ராஜீவன் திரைக்கதை எழுத்தாளரும் கூட. அவர் எழுதிய ‘பலேரிமாணிக்கம் ஒரு பத்திரகோலப் பதாகத்திண்டே கதை’ நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும், ‘கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்’ நாவல் ‘நியம்’ என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
அவர் 1959 இல் பிறந்தவர். ‘கே.டி.என். கொட்டூர்- எழுத்தும் ஜீவிதவும்’ நாவலுக்காக 2014ல் கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார். அவர் அமெரிக்காவில் லெட்டிக் ஹவுஸ் பெல்லோஷிப் மற்றும் ராஸ் பெலோ பவுண்டேஷன் பெல்லோஷிப் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.