முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு கண்டனம்
1 min read
Indian Nadars Federation condemns former Union Minister A. Raza
24,1,2023-
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நாடார் பேரமைப்பு
தென்காசி மாவட்டம், அகரக்கட்டு பகுதியில் நடைபெற்ற இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் திமுக எம்பி ஆர் ராசாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் வளர்ச்சி திட்டங்களை பற்றி ஆலோசிகப்பட்டது இதில் பேசிய மாநில துணை தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது கூறியதாவது:-
இந்த ஆண்டின் தொடக்கமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோட்டில் கொங்கு குணாளன் நாடார் அவர்களுடைய பிறந்தநாளில் நிறுவன தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் நாடார் தலைமையில் மாவீரன் கட்டுதடிகாரன் கொங்கு குணாளன் நாடாருக்கு மரியாதை செய்து நம்முடைய சமுதாய பணியை தொடங்கி இருக்கிறோம். நம்முடைய சமுதாயத்தில் வாழ்ந்து மறைந்த தலைவர்களை நினைவுபடுத்தும் விதமாகவும் நாடார் சமுதாயத்தின் வரலாறுகளை கிராமம் கிராமமாக சென்று எடுத்து சொல்லுகின்ற விதமாகவும் இருக்க வேண்டும் வரும் சந்ததியினர் நாடார் சமுதாயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளாவிடில் நாடார் சமுதாயத்தின் வரலாறுகள் மதவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் அழிக்கப்படும் போது எதிர்த்து குரல் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு கொண்டிருக்கிறது .
ஆ.ராசா
முன்னாள் மத்திய அமைச்சர் திமுக எம்பி ஆ. ராசா போன்றவர்கள் காமராஜரை பற்றி தவறான கருத்தை சொல்லிய போதும் நம்மைப் போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது. ஏனென்றால் சமுதாயத்தின் வரலாற்றை இன்னும் நம்முடைய மாணவர்கள் இளைஞர்கள் சரியாக தெரிந்து கொள்ளாததன் காரணத்தால் தான் நாடார் சமுதாயத்தில் பிறந்த மாபெரும் தலைவர்களை பற்றி தவறான கருத்தை சொல்லும் போது எதிர்த்து குரல் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். திமுக எம்பி ஆ ராசா பெருந்தலைவர்
காமராஜரை பற்றி பேசியதற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் ஆ.ராசா பெருந்தலைவர் காமராஜர் பற்றி நன்கு தெரிந்து கொண்டு பேசி இருக்க வேண்டும். காமராஜர் ஒருபோதும் ஊழலுக்காக சிறை சென்றவர் இல்லை. நாட்டின் விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களுக்காக சிறை சென்றவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதை ஆ ராசா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் பற்றி தவறான கருத்தை பதிவு செய்பவர்களை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருகலாம் நாடார் சமுதாயம் ஒருபோதும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறுஅவர் பேசினார்.
தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட தலைவர்களிடம் நிர்வாகிகள் நியமன படிவங்கள் வழங்கப்பட்டது இந்த ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெனார்த்தனன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணகவிஜயன் தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் கீழபுலியூர் முத்து நயினார் கடையநல்லூர் முருகன் பாவூர்சத்திரம் பத்மநாதன்
மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்