தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் சென்றதால் தம்பதியர் தற்கொலை
1 min readA couple committed suicide near Tuticorin after their daughter went with her boyfriend
24.1.2023
தூத்துக்குடி அருகே மகள் காதலனுடன் ஓடியதால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள கீழ வல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (45), இவரது மனைவி சங்கரம்மாள் (40). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிகாம் முடித்துள்ளார்.
இந்நிலையில், அவரது மகள், தான் காதலித்து வந்த ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் சென்றுவிட்டாராம். இதில் மனவேதனையடைந்த சங்கரம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்த கணவர் அதிர்ச்சியில் விஷம் குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், ரூரல் டிஎஸ்பி (பொ) சத்யராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.