பழைய குற்றாலம் அருகே சினிமா படப்பிடிப்பால் நீர் வரத்து கால்வாய் அழிப்பு
1 min read
Destruction of water supply canal due to movie shooting near Old Courtalam
16.2.2023
பழைய குற்றாலம் அருகே சினிமா படப்பிடிப்பால் நீர் வரத்து கால்வாய் அழித்துவிட்டதாக சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் மாவட்ட ஆட்சித்தலைவர் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்
அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
சினிமா படப்பிடிப்பு
தென்காசி மாவட்டம், பழைகுற்றாலம், ஒப்பினான்குளம் செங்குளம் கால்வாய் செல்லும் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று காரணம் சொல்லி கால்வாயின் கரையை பாழ்படுத்தி நீர் வரத்தை கேள்விக்குறி ஆக்குகிறார்கள் படப்பிடிப்புகுழுவினர்.அவர்களிடம் நீர்வரத்து கால்வாயை அழிக்கக்கூடாது என்று கூறினால் அதனை அவர்கள் காது கொடுக்க கேட்கவில்லை.
மேலும் இந்த இடம் முண்டந்துறை புலிகள் காப்பக கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளதால் உரிய அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டும் வகையில் சினிமா படப்பிடிப்பு குழுவினர் எங்களுக்கு முதல்வரை தெரியும் என்று ஆணவமாக பேசுகின்றனர்.இந்த கால்வாய் மூலம் சுமார் 15 குளங்கள் பாசன வசதி பெறுகிறது.
இவர்களின் இத்தகைய அடாவடிச்செயலால் அந்தப் பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடுக்கப்படுவதோடு அந்த பகுதியில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப் படுவதோடு குடிநீர் பிரச்சனையும் ஏற்படும்.வெள்ளக் காலங்களில் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
பொதுபணித் துறையிடமோ, வனத்துறையிடமோ, சூற்றுச்சூழல் துறையிடமோ எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தங்கள் இஷ்டத்திற்கு சட்டவிரோதமாக செயல்படுகின்றனர எனவே .விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதோடு படப்பிடிப்பு குழுவினரால் அழிக்கப்பட்டுள்ள நீர்வழி பாதையினை உடனடியாக சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க தங்களை பொதுமக்கள் சார்பில் அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தபுகார் மனுவினை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலர் ஆகியோருக்கும் சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் அனுப்பி உள்ளார்.