May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம்

1 min read

Dismissal of assistant professor who spoke obscenely to college girls on cell phone

16.2.2023
பரமக்குடி அரசு கல்லூரில் கல்லூரியில் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய உதவி பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கைளை எடுத்துள்ளது.

உதவி பேராசிரியர்

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சத்தியசேகரன். இவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம் அவரது தோழியை பற்றி ஆபாசமாகவும், ஜாதி குறித்தும், கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்தும் செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக பேசும் மற்றொரு ஆடியோவும் பரவி வருகிறது. இதையடுத்து பேராசிரியர் சத்தியசேகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிடை நீக்கம்

இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மேனகா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ – மாணவிகளிடம் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.பின்பு மறு அறிவிப்பு வரை கல்லூரி விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் உதவி பேராசிரியர் சத்தியசேகரனின் செயல்பாடுகள் குறித்து கல்லூரி முதல்வர் கல்லூரி கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் உதவி பேராசிரியர் சத்தியசேகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இந்நிலையில் உதவி பேராசிரியர் சத்தியசேகரனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.