கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி- 4 பேர் கைது.
1 min readWife who strangled her husband for obstructing forgery – 4 people arrested
21.2.2023
ஆர்.கே.பேட்டை அருகே கள்ளதாலுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை சம்பவத்தில் மனைவி அவரது கள்ளக் காதலன் கூட்டளிகள் உட்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் சாவு
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே சந்திரவிலாசபுரம் ஊரட்சி சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவரது மகன் யுவராஜ்(வயது 29), ஸ்ரீபெரும்பதூரில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது தாய்மாமன் மகள் காய்த்திரி (25) என்பவருடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஜீவிதா என்ற இரண்டு வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யுவராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது மனைவி காய்த்திரி கிராமமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக யுவராஜ் தந்தை ஆறுமுகம் புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து காயத்திரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரத்ததில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
கொலை
காயத்திரி சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சின் படித்துக் கொண்டிருந்த போது அங்கு பணியாற்றிய திருத்தணி அருகே அகூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(27) என்பவருடன் காதல் மலர்ந்திருந்தது. படிப்பு முடிந்ததும் மாமன் மகன் யுவராஜுக்கு காயத்திரியை திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருத்தணி தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியில் சேர்ந்த காயத்திரிக்கு அதே மருத்துவமனையில் வேலைக்கு சென்று வந்துக் கொண்டிருந்த சீனிவாசனுடன் மீண்டும் தொடர்பு ஏற்ப்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த காயத்திரி வேலை செல்க்கூடாது என கணவர் நிறுத்திவிட்டார். இதனால் கணவன் மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
காதலுக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் கணவரை தீர்த்து கட்ட கள்ள காதலனுடன் சதி திட்டம் தீட்டி நேற்று முன் தினம் இரவு வீட்டில் யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்த போது காயத்திரி கள்ளக் காதலன் அவரது கூட்டாளிகள் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன்(28), ஹேமந்த் (எ) ஜில்லு(22) ஆகியோர் கூட்டாக யுவராஜ் கழுத்து நெரித்து கொலை செய்து அங்கிருந்து சென்று விட்டனர். மறு நாள் காலை கணவர் தற்கொலை செய்துக் கொண்டதாக காயத்திரி நாடகமாடி நம்ப்வைக்கும் முயற்சி செய்தார். ஆனால் போலீசார் விசாரணையில் உண்மை அம்பலமானது.
கைது
இதனை அடுத்து டி.எஸ்.பி விக்ணேஷ், காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் போலீசார் காயத்திரி, தலைமறைவான சீனிவாசன் அவரது கூட்டாளிகள் மணிகண்டன், ஹேமந்த் (எ) ஜுல்லு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். . கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி காதலன் அவரது கூட்டளிகளுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் ஆர்.கே.பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்பப்டுத்தியது.
.