மத்தளம்பாறை பகுதியில் தென்னை, வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை
1 min readA wild elephant damaged coconuts and bananas in Mattalamparai area
21.2.2023
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கிருந்த தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றன.
காட்டு யானை
பழைய குற்றாலம் அருகே உள்ள மத்தளம் பாறை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் விவசாயிகள் நாதன், முத்து ஆகியோருக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளது. அங்கு நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரவு அந்த பகுதியில் புகுந்த காட்டு யானை அங்கிருந்த தென்னை, வாழைகளை உண்டு விட்டு அதிகாலை மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
வாழைகள் சேதம் இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை, வாழைகள் சேதமடைந்தது. காட்டு யானை புகுந்ததில் சுமார் ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.