கடையம் அருகே தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்த யானைக்கூட்டம்
1 min read
A herd of elephants uprooted coconut trees near the store
6.3.2023
கடையம் அருகே விவசாயி ஒருவரின் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.
தகவலறிந்த வனத்துறையினர் கூட்டமாக வந்த 7 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
யானைகள்
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளான கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, யானைகள் ஆகியவை வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கருத்தப்பிள்ளையூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் 60-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.
இந்நிலையில் நேற்று கடனா அணையின் அடிவாரப்பகுதியான கருத்தப்பிள்ளையூர் அருகே சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக உலா வந்தன. இதையடுத்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை ரேஞ்சர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து இரவு நேரத்தில் வெடி வெடித்தும், பொதுமக்களின் ஆதரவுடனும் யானை கூட்டத்தை விரட்டியடித்தனர்.
இன்று..
ஆனால் இன்று காலையும் கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. தகவலறிந்த வனத்துறையினர் கூட்டமாக வந்த 7 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலாம்பூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, திரவியம் நகர், கடவக்காடு, கருத்தப்பிள்ளையூர் போன்ற பகுதியில் உள்ள தோப்புகளில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.