புளியங்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
1 min read
Private Sector Employment Camp at Buliangudi
13.3.2023
தென்காசி மாவட்டம், புளியங்குடி
எல் வீராச்சாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரசு / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய பாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.துரை , இரவிசந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் முன்னிலை வகித்தார் . இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் . துரை.இரவிச்சந்திரன் பேசியதாவது:-
தமிழ்நாடுஅரசின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடிக்கொடுக்கும் வகையில் தனியாரத்துறையில் மூலமாக வேலைவாய்ப்பு ஏற்படுத்த அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது . அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் 2 முகாம்கள் நடைபெற்று சுமார் 1300 க்கும் மேற்பட்டோர்க்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புளியங்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு யேலைவாய்ப்பு வழங்கும் விதமாக சுமார் 120 க்கும் அதிகமான தனியார் துறையின் மூலம் 3000 க்கு அதிகமான கல்லூரி மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்று சுமார் 900 க்கும் அதிகமான மாணவர்கள் நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு அதில் 18 மாணவ , மாணவியர்களுக்கு பாணிநியமன ஆனையினையும் வழங்கப்பட்டுள்ளது .
மேலும் 7 திறன் பயிற்சியாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ , மாணவியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் . வேலைவாய்ப்புத்துறையின் மூலம் பொதுப்பிரிவினைச் சார்ந்த இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக 10 வகுப்பு படித்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ரூ .300 , 12 ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ரூ .400 , பட்டபடிப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு ரூ .600 ம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகிறது . அதுமட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் தொழில் மமயத்தின் மூலமாக கடன் உதவிகளும் மானியத்துடன் வழங்கபட்டு வருகிறது . எனவே தனியார் மற்றும் அரசுத்துறையின் வேலைவாய்ப்பினை எதிர்பாராமல் தொழில் முனைவோராக மாறலாம் அதற்கு தேவையான பயிற்சி தொழில்மையத்தின் மூலம் வழங்கப்படும் . இதன் மூலம் மாணவச்செல்வங்கள் 10 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கமுடியும் . எனவே எந்த ஒரு பாதையை தேர்ந்தெடுத்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டு வாழ்வில் வெற்றிப்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிசந்திரன் தெரிவித்துள்ளார் .
இந்த நிகழ்ச்சியில் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஈ.ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ் , வாசுதேவநல்லூர் ஒன்றிய குழுத்தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் , புளியங்குடி நகர்மன்றத் தலைவர் எஸ். விஜயா சௌந்திரபாண்டியன் , நகர்மன்ற துணைத்தலைவர் அந்தோணிசாமி , தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் ( வேலைவாய்ப்பு ) .என்.மகாலெட்சுமி , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.ஆர். ரம்யா , திட்டஇயக்குநர் { மகளிர் திட்டம் ) .குருநாதன் , புளியங்குடி எஸ் வீராச்சாமி செட்டியார் பொறியியல் பற்றும் தொழில்நுட்ப கல்லூரி சேர்மன் டாக்டர் ஆர்.முருகையா உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ரா. ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்